திமுக பெண் கவுன்சிலர் கொலை: நகைக்காக கொலை செய்த தம்பதி! - 24 மணிநேரத்தில் வளைத்த போலீஸ்

0

கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே உள்ள பாலமலை காட்டுப்பகுதியில் கொடூரமான முறையில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்நிலையில், அந்த வழக்கை விசாரித்த க.பரமத்தி காவல் நிலைய போலீஸார், கொலை செய்யப்பட்டு கிடந்த அந்த பெண், ஈரோடு மாவட்டம், கொடுமுடி சோளக்காளிபாளைத்தைச் சேர்ந்த ரூபா என்பதை கண்டறிந்தனர். அதோடு, ரூபா தி.மு.க பேரூராட்சி வார்டு கவுன்சிலராகவும் இருந்து வந்தார். இந்நிலையில், கொலை செய்யப்பட்டு உடல் சிதைந்த நிலையில் இருந்த தீபாவின் உடல் கடந்த 26 -ம் தேதி மீட்டு, கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூராய்வு செய்வதற்காக அனுப்பி வைக்கப்பட்டது.

கொலை

இந்நிலையில், கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் உத்தரவின் பேரில், ரூபாவை கொலை செய்தவர்களை கண்டுப்பிடிக்க, அரவக்குறிச்சி காவல் துணை கண்காணிப்பாளர் அண்ணாதுரை தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு, விசாரணை நடைபெற்றது. அதோடு, க.பரமத்தி காவல் நிலைய போலீஸார் இதுகுறித்து, வழக்கு பதிந்து, கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை மேற்கொண்டு, கொலை செய்யப்பட்ட தி.மு.க கவுன்சிலர் ரூபாவின் உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

இதனிடையே விசாரணையில், தினந்தோறும் கரூருக்கு வரும் பேருந்தில் ரூபாவுடன் பயணிக்கும் நித்யா என்ற பெண், கொலை செய்யப்பட்ட ரூபாவை வீட்டு வேலைக்கு அழைத்துச் செல்வதாக கூறி பவுத்திரம் பாலமலை பகுதிக்கு அழைத்துச் சென்று, சென்று 7 சவரன் தங்க செயின், தோடு, வெள்ளி, கொலுசு ஆகியவற்றை பறித்துக் கொண்டு கொடூரமான முறையில் கொலை செய்தது தெரியவந்தது. நித்யாவின் கணவர் கதிர்வேல் கொலை செய்வதற்கு உடந்தையாக இருந்ததோடு, தடயங்களை அழிக்க முயற்சி செய்ததாக அவரையும் கைது செய்து கைது செய்துள்ளனர்.

நித்யா

கொலை செய்யப்பட்ட தி.மு.க கவுன்சிலர் ரூபா வழக்கை விசாரித்த தனிப்படை போலீஸார் 24 மணி நேரத்தில் குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்ததால், கரூர் காவல் துறை கண்காணிப்பாளர் சுந்தரவதனம் தனிப்படை போலீஸாருக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளார். நகைக்காக தன்னோடு பேருந்தில் பயணிக்கும் பெண் கவுன்சிலர் ரூபாவை மற்றொரு பெண் தனது கணவரோடு சேர்ந்து கொலை செய்துள்ள சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk


மேலும் படிக்க திமுக பெண் கவுன்சிலர் கொலை: நகைக்காக கொலை செய்த தம்பதி! - 24 மணிநேரத்தில் வளைத்த போலீஸ்
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top