தெரிந்தே புதைகுழியில் விழுபவர்களை...

0

சில புள்ளிவிவரங்கள் நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். சில புள்ளிவிவரங்கள் நம்மைக் கடும் வருத்தத்தில் தள்ளும் அப்படிப்பட்ட ஒரு புள்ளிவிவரம் இப்போது வந்திருக்கிறது. கடந்த ஜூலை மாதத்தில் கிரெடிட் கார்டு மூலம் செலவு செய்யப்பட்ட தொகை ரூ.1.44 லட்சம் கோடியை எட்டியிருக்கிறது. கடந்த மே மாதத்தில் ரூ.1.40 லட்சம் கோடியாக இருந்தது, ஜூன் மாதத்தில் ரூ.1.37 லட்சம் கோடியாகக் குறைந்தது என்றாலும், ஜூலையில் செலவு செய்யப்பட்ட ரூ.1.44 லட்சம் கோடி என்பது கடந்த காலங்களில் இல்லாத அளவுக்கு மிக மிக அதிகம்.

அது மட்டுமல்ல, கிரெடிட் கார்டுகளின் எண்ணிக்கையும் வரலாறு காணாத வேகத்தில் அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் நம் நாட்டில் புழக்கத்தில் இருந்த மொத்த கிரெடிட் கார்டுகளின் எண்ணிக்கை 8.24 கோடி. இந்த எண்ணிக்கை கடந்த ஜூலை மாதத்தில் 8.99 கோடியாக உயர்ந்திருக்கிறது. அதாவது, மாதம்தோறும் 12.5 லட்சம் கிரெடிட் கார்டுகள் புதிதாக உருவாகி, புழக்கத்தில் வந்துசேர்ந்துள்ளன! இந்த ஆண்டின் முடிவில் இன்னும் 75 லட்சம் புதிய கிரெடிட் கார்டுகள் புழக்கத்தில் வந்துசேர்ந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை!

கிரெடிட் கார்டு என்பது நவீன கடன் வடிவம். அதனால் பல நன்மை கிடைக் கிறது என்று வாதிடுபவர்கள் பலர். அவசரத்துக்குக் கடன் வேண்டுமெனில் யாரிடம் போய் கேட்பது என்று தெரியாமல் தவிப்பவர்கள், கிரெடிட் கார்டைப் பயன்படுத்துகிறார்கள். 4 முதல் 5 வட்டிக்கு (48% முதல் 60%) வரை கடன் வாங்கிய வர்கள், கிரெடிட் கார்டு மூலம் 32% - 36% வட்டியில் கடன் வாங்குகிறார்கள்.

கிரெடிட் கார்டைப் பயன்படுத்துவதில் இப்படி சில பாசிட்டிவ்வான விஷயங் கள் இருந்தாலும், ஆழம் தெரியாத குளத்தில் சந்தோஷமாக நீச்சலடிக்கப்போய், கடைசியில் கண்ணுக்குத் தெரியாத வேர்களில் கால் சிக்கி, அதிலிருந்து விடுபடுவது எப்படி என்று தெரியாமல் திணறுபவர்கள் பல லட்சம் பேர்.

நிதியை நிர்வாகம் செய்வதில் குறைந்தபட்ச ஒழுங்குகூட இல்லாதவர்கள்தான் கிரெடிட் கார்டுகளை இஷ்டத்துக்குப் பயன்படுத்தி, பெரும் சிக்கலில் மாட்டிக்கொள் கிறார்கள். இவர்கள், கிரெடிட் கார்டை சரியாகப் பயன்படுத்தும் தகுதிகொண்ட வர்களா என்றெல்லாம் வங்கிகள் பார்ப்பதில்லை. வாங்கிய கடனைத் திரும்பக் கட்டவில்லை எனில், குண்டர்களை அனுப்பி மண்டையை உடைப்பதில் மட்டுமே வங்கிகள் அக்கறையோடு செயல்படுகின்றன.

இந்த விஷயத்தில் வங்கிகளை மட்டும் குறை சொல்லிப் பயனில்லை. நிதி ஒழுங்கு பற்றி எந்தப் புரிந்துகொள்ளலும் இல்லாதவர்கள்தான், கிரெடிட் கார்டு வேண்டுமா என்று கேட்டவுடன், வாங்கிக்கொள்கிறார்கள். ‘கேக்காமலே கொடுத்துட் டாங்க...’ என்று சமாதானம் சொல்லிக்கொண்டு, பயன்படுத்த ஆரம்பித்துவிடுகிறார்கள். அதைப் பற்றிய அடிப்படை உண்மைகளைக்கூடப் புரிந்துகொள்ளாமல் பயன் படுத்திவிட்டு, விழிபிதுங்கி நிற்கிறார்கள்!

தெரியாமல் புதைகுழியில் விழுபவர்களுக்குப் பரிதாபப்படலாம்; தெரிந்தே புதைகுழியில் விழுபவர்களை என்னவென்று சொல்வது? தன்னுடைய நிதியை சரியாக நிர்வாகம் செய்யும் தகுதி ஒருவருக்கு இருக்கிறதா, இல்லையா என்று பரிசோதித்த பின்பே அவருக்கு கிரெடிட் கார்டு தர வேண்டும் என்று ஒரு சட்டம் கொண்டுவந்தால் மட்டுமே, இந்தப் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும்!

- ஆசிரியர்


மேலும் படிக்க தெரிந்தே புதைகுழியில் விழுபவர்களை...
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top