இம்மானுவேல் சேகரனுக்கு மணிமண்டபம்: `திமுக சொல்லும்; அதிமுக தான் செயல்படுத்தும்” - ஆர்.பி உதயகுமார்

0

இமானுவேல் சேகரனின் 66-வது நினைவு நாளையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள அவரின் நினைவிடத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர் , அமைப்பினர், ஜார்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில் இம்மானுவேல் சேகரனுக்கு ரூ.3 கோடி மதிப்பில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தமிழக அரசு சார்பில் உருவச் சிலையுடன் மணிமண்டபம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்தார். இதையொட்டி பரமக்குடியில் அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வந்த தி.மு.க, அ.தி.மு.க, பா.ஜ.க உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.

முதல்வர் ஸ்டாலின்

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசும் போது, ``இமானுவேல் சேகரனுக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டுமென முதலமைச்சரிடம் அவரின் குடும்பத்தினர் கோரிக்கை வைத்திருந்தனர். அதன்படி ரூ.3 கோடியில் மணிமண்டபம் அமைக்கப்படும் முதலமைச்சர் அறிவித்துள்ளார். இமானுவேல் சேகரன் சமூக நீதியை பாதுகாக்க போராடினார். நாமும் சமூக நீதியை காக்க போராட வேண்டும்” எனக் கூறினார்.

முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், ``அ.தி.மு.க ஆட்சியில் இமானுவேல் சேகரன் நினைவு தினம் அரசு விழாவாக கொண்டாடப்படும். தேவேந்திர குல வேளாளர் பட்டியலில் வெளியேற்றம் ஆகிய கோரிக்கைகளை நிறைவேற்ற அமைச்சர்கள் கொண்ட குழு அமைத்து சட்டரீதியான நடவடிக்கை எடுத்தோம். இந்நிலையில் இமானுவேல் சேகரன் நினைவாக மணிமண்டபம் அமைக்க முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அவர்கள் சொன்னதை செய்வது இல்லை. பழனிசாமி ஆட்சியில் தான் அதுவும் நடக்கும்.

அதிமுக சார்பில் ஆர்.பி உதயகுமார் அஞ்சலி செலுத்தினார்

தி.மு.க சொல்ல மட்டுமே செய்யும், அ.தி.மு.க தலைமையிலான அரசு வந்த பிறகு அது நிறைவேற்றப்படும், அரசு விழாவாகவும் அறிவிக்கப்படும்" என்றார்.

பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, ``இமானுவேல் சேகரனுக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. தங்களைப் பட்டியல் இனத்திலிருந்து வெளியேற்ற வேண்டும் என தேவேந்திர குல வேளாளர்கள், மத்திய, மாநில அரசுகளிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதில் சாதக பாதகங்களை ஆராய வேண்டும். கோரிக்கை நிறைவேற்றப்படும். அதற்கு உதவுவோம், அதுவரை காத்திருப்போம்" என தெரிவித்தார்.

பா.ஜ.க சார்பில் அண்ணாமலை அஞ்சலி செலுத்தினார்

அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன், "தமிழக அரசு இமானுவேல் சேகரனுக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என அறிவித்திருக்கிறது. இதனை அறிவிப்போடு நின்று விடாமல், அதற்கான பணிகளை தொடங்க வேண்டும்” என கூறினார்.

இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் 3 டி.ஐ.ஜி, 25 எ‌ஸ்.பி, 30 ஏ.டி.எஸ்.பி, 70 டி‌எஸ்.பி மற்றும் உள்ளுர் தவிர பிற மாவட்டங்களை சேர்ந்த சுமார் 8 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படக்கூடும் என்று கண்டறியப்பட்ட 166 பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அதுமட்டுமின்றி பரமக்குடி முழுவதும் 200 கண்காணிப்பு கேமராக்கள், 7 ட்ரோன் கேமராக்கள் மூலம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் 42 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடக்காத வகையில் மாவட்டம் முழுவதும் போலீஸாரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டிருந்தது.


மேலும் படிக்க இம்மானுவேல் சேகரனுக்கு மணிமண்டபம்: `திமுக சொல்லும்; அதிமுக தான் செயல்படுத்தும்” - ஆர்.பி உதயகுமார்
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top