வீட்டைவிட்டு வெளியேறி காதல் திருமணம்; நீதிமன்றத்தில் தஞ்சமடைந்த ஜோடி... காரைக்காலில் பரபரப்பு!

0

சென்னையை அடுத்த அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரியா (19) (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது). இவர் அங்குள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார். இவரும் காரைக்கால் மாவட்டம், நிரவி பகுதியைச் சேர்ந்த பாலிடெக்னிக் மாணவர் ராம் (22) (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) என்பவரும், கடந்த ஆறு வருடங்களாக சமூக வலைதளம் மூலம் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

சமூக வலைதள காதல்

இவர்கள் காதல் விவகாரம் பிரியாவின் வீட்டிற்குத் தெரியவந்தது. இதனை அடுத்து பிரியாவை அவரின் பெற்றோர் கண்டித்துள்ளனர். இந்த நிலையில் காதலர்கள் கடந்த ஆறு நாள்களுக்கு முன்பு வீட்டைவிட்டு வெளியேறி, நாகை மாவட்டம், திருக்குவளை சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு திருமணம் செய்துள்ளனர். பின்னர் அங்குள்ள கோயிலில் தாலி கட்டியதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையில் பிரியா காணாமல்போனது குறித்து அவரின் பெற்றோர் சென்னை அம்பத்தூர் காவல் நிலையத்தில் தனது மகளைக் கடத்திச் சென்றுவிட்டதாகவும், அவரை மீட்டுத்தரக் கோரியும் புகாரளித்துள்ளனர். இதனையடுத்து பிரியாவின் செல்போன் சிக்னல் மூலம் சென்னை போலீஸார் காரைக்காலுக்கு விரைந்து, காதல் ஜோடியைப் பிடிக்க முயன்றுள்ளனர். இதனையறிந்த காதல் ஜோடி, பாதுகாப்பு வேண்டி நிரவி காவல் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளனர். ஆனால் நிரவி காவல் நிலைய போலீஸார், `அம்பத்தூர் போலீஸார் உங்களைத் தேடி வருவதால், அவர்களிடம் தஞ்சமடையுங்கள்' என வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. அதனால் செய்வதறியாது தவித்த ஜோடி, தங்களின் நண்பர்களுடன் காரைக்கால் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் தஞ்சமடைந்தனர்.

சென்னை போலீஸார் காரைக்கால் நீதிமன்றத்துக்குள் நுழைந்து, பெண்ணை அழைத்தச் செல்ல முயன்றபோது, அவர்களுடன் செல்ல மறுத்து கூச்சலிடவும், அங்கிருந்த வழக்கறிஞர்கள் `என்ன பிரச்னை?' என கேட்டபோது, பிரியா விளக்கமாகக் கூறியுள்ளார். அதையடுத்து தமிழக போலீஸாரை தடுத்த காரைக்கால் வழக்கறிஞர்கள், `இருவரும் திருக்குவளையில் பதிவு திருமணம் செய்துகொண்ட நிலையில், அவர்களைப் பிரிக்க முடியாது' எனக் கூறி, பதிவு திருமணம் குறித்த ஆவணங்களை அளித்ததையடுத்து, தமிழக போலீஸார் சென்னை திரும்பினர்.

தஞ்சமடைந்த ஜோடி

மேலும் சென்னை போலீஸாருடன் வந்த பெண்ணின் உறவினர்கள், அவரின் கழுத்து, காதில் இருந்த தங்க நகைகள் மற்றும் செல்போனை நடுரோட்டிலேயே அவரிடமிருந்து பெற்றுச் சென்றனர். காதல் திருமணம் செய்துகொண்ட இளம்ஜோடிக்கு நிரவி காவல் நிலையத்தில் பாதுகாப்பு வழங்கப்படாத நிலையில், காரைக்கால் மாவட்ட நீதிமன்றத்தில் தஞ்சம் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


மேலும் படிக்க வீட்டைவிட்டு வெளியேறி காதல் திருமணம்; நீதிமன்றத்தில் தஞ்சமடைந்த ஜோடி... காரைக்காலில் பரபரப்பு!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top