இன்றே சேமிக்கத் தொடங்காவிட்டால், நாளை நம் நிலை..?

0

இன்னும் 27 ஆண்டுகளுக்குப் பிறகு அதாவது, 2050-ம் ஆண்டில் நம் நாட்டில் உள்ள மக்களில் ஐந்து பேரில் ஒருவர் 60 வயதுக்கு மேற்பட்டவராக இருப்பார் என ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியம் (UNFPA) வெளியிட்டிருக்கும் கணிப்பு நம்மை சற்று அதிர்ச்சி அடையச் செய்கிறது.

இந்தியாவில் முதியோர் குறித்து ஐ.நா வெளியிட்ட இந்த அறிக்கையானது, ‘‘2022 ஜூலை 1-ம் தேதிபடி, 14.9 கோடி முதியவர்கள் நம் நாட்டில் உள்ளனர். அதாவது, மொத்த மக்கள் தொகையில் முதியோர்கள் 10.5% உள்ளனர். இந்த எண்ணிக்கையானது 2036-ம் ஆண்டில் 22.7 கோடியாக அதிகரித்து, 15% பேர் முதியோர்களாக இருப்பார்கள். இந்த முதியோர்களின் எண்ணிக்கை 2050-ல் 20.8 சதவிகிதமாக உயர்ந்து, 34.7 கோடியாக இருப்பார்கள்’’ என்று கணித்திருக்கிறது.

இந்த நிலையை சிக்கலின்றி எப்படி எதிர்கொள்ளப்போகிறோம் என்பதை இன்றைக்கு 25 வயதில் இருக்கிற ஒவ்வொருவரும் இன்றே யோசிக்கத் தொடங்க வேண்டும். காரணம், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் இருப்பது போல, நம் நாட்டில் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் எதுவும் இல்லை. முதியோர்களுக்குத் தற்போது தரப்படும் ஆயிரம், இரண்டாயிரம் ரூபாயானது, 10, 20 ஆண்டுகளுக்குப் பிறகு 5,000 அல்லது 10,000 ரூபாயாக உயரலாமே தவிர, அந்தப் பணத்தை வைத்து நம் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்துவிட முடியாது. முன்பு, அரசு வேலைகளில் பென்ஷன் கிடைத்தது. இப்போது, அதுகூட இல்லை; அவ்வளவு ஏன், ரயில் டிக்கெட்டில் முதியோர்களுக்கு இருந்த சலுகைகூட நீக்கப்பட்டுவிட்டது.

இந்த நிலையில், ‘‘முதுமைக் காலத்தில் மகனோ, மகளோ நம்மைப் பார்த்துக்கொள்வார்கள்’’ என்கிற எதிர்பார்ப்பு இனிவரும் காலத்தில் எந்தளவுக்கு நிறைவேறும் என்பது கேள்விக்குறிதான். மாறிவரும் வாழ்க்கை முறையில் அவர்களை முழுமையாக எதிர்பார்த்து நிற்பது உறவில் விரிசலையே ஏற்படுத்தும்.

ஆக, முதுமைக் காலத்தில் தங்களுக்கான பொருளாதாரத் தேவைகளைக் குறை இல்லாமல் நிறைவேற்றிக்கொள்ள வேண்டுமெனில், அதற்கான நடவடிக்கைகளைத் தாங்களே எடுத்தாக வேண்டும். இதற்கு, 60 வயதுக்குப் பிறகு தேவைப்படும் பணத்தை இன்றே திட்டமிட்டுச் சேர்க்கத் தொடங்குவது அவசியத்திலும் அவசியம். ‘இன்னும் 25 ஆண்டுகள் இருக்கிறதே...’ என்று தள்ளிப்போடும் ஒவ்வொரு நாளும் கூடுதல் கஷ்டத்துக்கே வழிவகுக்கும்! அதே சமயம், இந்தப் பிரச்னையைத் தனிநபர்கள் தொடர்பான பிரச்னை என நினைக்காமல், ஒரு சமூகப் பிரச்னையாக கருதி, இதற்கான தீர்வுகளை மத்திய, மாநில அரசாங்கம் அவசியம் எடுக்க வேண்டும்.

முதியவர்கள், நாடு மற்றும் குடும்பத்தின் முன்னேற்றத்துக்காகப் பாடுபட்ட வர்கள். உழைக்கிற காலத்தில் அவர்களின் சக்தியை உறிஞ்சி எடுத்துவிட்டு, வயோதிக காலத்தில் அவர்களை சரியாகக் கவனிக்காமல்விடுவது மிகப் பெரிய துரோகம். எனவே, முதியோர்கள் உடலளவிலும், மனதளவிலும் பெரிய குறை எதுவும் இல்லாமல் நிம்மதியாக வாழும் சூழலை அரசாங்கங்கள் ஏற்படுத்த வேண்டும். அப்படி செய்வது மட்டுமே சரியான செயலாக இருக்கும்!

- ஆசிரியர்


மேலும் படிக்க இன்றே சேமிக்கத் தொடங்காவிட்டால், நாளை நம் நிலை..?
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top