`உங்க ஆட்சியில் கஞ்சா, பாலியல் தொழில் கொடிகட்டிப் பறக்குது’ - புதுச்சேரி முதல்வரிடமே திமுக புகார்

0

புதுச்சேரி திமுக எம்.எல்.ஏ சிவா முதல்வர் ரங்கசாமியை சந்தித்து மனு ஒன்றை அளித்தார். அதில், புதுச்சேரியில் தற்போது கஞ்சா, பாலியல் தொழில் அதிகரித்து விட்டதாக குற்றம்சாட்டி உள்ளார். அவர் தனது புகார் மனுவில், ``ஆன்மிகம், சுற்றுலாவுக்கு புகழ்பெற்ற புதுச்சேரி மாநிலத்தில் என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க கூட்டணி அரசு பொறுப்பேற்றதிலிருந்து தாராளமாக கஞ்சா தடையின்றி விற்கப்படுவதும், கஞ்சா பழக்கத்திற்கு இளைஞர்கள், மாணவர்கள் அடிமையாகி, போதையிலிருந்து மீள முடியாமல், சமூக விரோதிகளாக மாறுவதும் நாளுக்கு நாள் அதிகரித்தபடி உள்ளது. இதில் சிறார்கள் பெருமளவு அடிமையாகி தங்கள் வாழ்க்கையை சீரழித்து வருகின்றனர் என்பதும், தினம்தோறும் நாளிதழ்களில் அதுகுறித்து வரும் செய்திகளுமே அதற்கு சான்றாக உள்ளது. அதேபோல் ரெஸ்டோ பார்கள், மசாஜ் மற்றும் ஸ்பா சென்டர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரிப்பதால், வார இறுதி நாட்களில் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து இணையத்தளங்கள் மூலமாகவும், புரோக்கர்கள் மூலமாகவும் பாலியல் தொழிலும் கொடிகட்டி பறக்கிறது.

புதுச்சேரி அரசு

புதுச்சேரிக்கு சென்றால் மதுபானம் குடித்துவிட்டு, மசாஜ் சென்டரில் மஜாவாக இருக்கலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வார இறுதி நாட்களில் உள்ளூர் மக்கள் குறிப்பாக, குடும்பப் பெண்கள் வீட்டைவிட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வெளிநாடு மற்றும் வெளிமாநில சுற்றுலாப் பயணிகள் அச்சமடைந்துள்ளனர். புதுச்சேரியை இவையெல்லாம் சீரழிப்பது போதாது என்று, பல்வேறு பகுதிகளில் சூதாட்ட கிளப்புகள் அமைக்கும் பணியில் ஆளும் கட்சியின் துணையுடன் பெருமுதலாளிகள் களத்தில் இறங்கியிருப்பதாக தகவல்கள் வருகின்றன. ஏற்கெனவே ஏனாம் பிராந்தியத்தில் சட்டத்திற்கு விரோதமாக ’ராயல் ஏனாம் ரெக்ரேஷன் கிளப்’ மற்றும் ’விட்டல் ஏனாம் ஸ்போர்ட்ஸ் கிளப்’ என 10–க்கும் மேற்பட்ட கிளப்புகள் பொதுமக்கள், தொழில் நிறுவனங்கள் மிகுந்த பகுதியில் செயல்படுகின்றன.

அதனால் கர்நாடகா, ஆந்திரா, கேரளா, ஒரிசா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களைச் சேர்ந்த சமூக குற்றவாளிகள் ஏனாமுக்கு தினம்தோறும் படையெடுப்பதாகவும், நாளொன்றுக்கு ரூ.100 கோடி அளவிற்கு சூதாட்டம் நடப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. இந்த கிளப்புகள் மூலம் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுவதாகக் கூறி அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர், முன்னாள் அமைச்சர் ஆகியோர் துணைநிலை ஆளுநர், முதல்வர் ஆகியோரிடம் மனு அளித்திருக்கின்றனர். ஆனால் இதுவரை அவற்றின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. காவல்துறை ஆய்வு நடத்த உயர்நீதி மன்றம் தடை பெற்றுள்ளதால், சூதாட்ட உரிமையாளர்கள் தைரியமாக நடத்துகின்றனர். மாவட்ட நிர்வாகமும் அமைதியாக இருப்பதைப் பார்த்தால், உயர் பதவியில் இருப்பவர்களுக்கு மாதம்தோறும் கையூட்டு வழங்கப்படுவது உறுதியாக தெரிகிறது. சூதாட்ட கிளப் மூலம் பெரும் பணத்தை பார்த்த உயரதிகாரிகள்தான், புதுச்சேரியிலும் சூதாட்ட கிளப்புகளை அமைக்கும் பணிகளில் ஆர்வமாக இருக்கின்றனர்.

ஏற்கனவே நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் புதுச்சேரியில் கஞ்சா, பாலியல் தொழில் போன்ற சமூக விரோத செயல்களுடன் சூதாட்டமும் சேர்ந்தால், கறுப்பு மாநிலமாக மாறிவிடுமோ என்று அச்சம் எழுந்திருக்கிறது. எனவே புதுச்சேரி மாநில மக்களின் நலன்கருதி, இதுபோன்ற சமூக விரோத செயல்களை சட்டம் இயற்றி அடக்கி ஒடுக்க வேண்டும். அப்போதுதான் மக்களுக்கு இந்த அரசு மீது நம்பிக்கை ஏற்படும். வெளிநாடு மற்றும் வெளி  மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் அச்சம் களைந்து புதுச்சேரிக்கு வருவார்கள். இந்த சட்டம் இயற்றுவதற்கு ஒன்றிய உள்துறையிடம் அனுமதிபெற தேவையில்லை என நினைக்கிறேன். எனவே இந்த சட்டம் இயற்றுவதற்கு தலைமைச் செயலர், உள்ளாட்சித் துறை செயலர், நகராட்சி ஆணையர்களைக் கொண்ட சிறப்பு அமைச்சரவையை எதிர்வரும் சட்டமன்ற கூட்டத் தொடருக்குள் கூட்டி, அறிவிப்பு செய்ய வேண்டும் என புதுச்சேரி அரசை கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.


மேலும் படிக்க `உங்க ஆட்சியில் கஞ்சா, பாலியல் தொழில் கொடிகட்டிப் பறக்குது’ - புதுச்சேரி முதல்வரிடமே திமுக புகார்
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top