கொடநாடு: `என் மனைவியை தூண்டிவிடுகிறார் எடப்பாடி; பேரம் பேச ஆள்கள் அனுப்புகிறார்’ - தனபால்

0

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு, சமீப காலமாக சூடு பிடித்து கொண்டிருக்கிறது. அமைதியாக இருந்த வழக்கினை மீண்டும் பரபரப்பாக்கும் வகையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் டிரைவரான கனகராஜின் அண்ணன் தனபால் அளித்து வரும் பேட்டிகளால், இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு சவாலாக இருந்து வருகிறது. 

இந்த நிலையில் தான் தனபாலின் மனைவி  செந்தாமரைச் செல்வி சேலம் மாவட்ட எஸ்.பி யிடம் புகார் ஒன்று நேற்று அளித்துள்ளார். புகார் அளித்துவிட்டு வெளியே வந்த அவர் ஜூனியர் விகடனுக்கு ஒரு பிரத்தியோக பேட்டி கொடுத்தார்.

அதில், "தனது கணவரால் என் உயிருக்கும், எனது பிள்ளைகள் உயிருக்கும் பாதிப்பு உள்ளது. இவர் சிறையில் இருந்து வெளியில் வந்ததிலிருந்து பலரின் தூண்டுதலின் பேரில் செய்தியாளர்களை சந்தித்து வருகிறார். இதனால் அவருக்கு லாபமாக இருந்தாலும் கூட இதனால் பல பிரச்னைகள் மீண்டும் எங்களை வந்து சேரும்.

ஆகையால் அவரை கொடநாடு தொடர்பாக எதுவும் பேச வேண்டாம் என்று கூறி இருந்தேன். ஆனால்  தேவையில்லாத பொய்களை கூட்டியும், குறைத்தும் பேசி வருகிறார். இவர் சிறையில் இருந்த போது ஓபிஎஸ் தரப்பில் இருந்து குருமூர்த்தி என்பவர் நேரில் சந்திக்க வந்திருந்தார். அவர், `அண்ணனிடம் எல்லாம் பேசி விட்டேன் உங்களுக்கு எல்லா உதவியும் செய்து கொடுக்க கூறியுள்ளார்’ என்று சொன்னார். 

தற்போது எனது கணவர் தனபால் சிறையில் இருந்து வெளியில் வந்தவுடன் கொடநாடு தொடர்பாக பேசி வருகிறார். அவர் சொல்வதெல்லாம் பொய் மட்டுமே அதில் உண்மை கொஞ்சம் கூட இல்லை" என்று போட்டு உடைத்தார். இந்த நிலையில், மனைவி தன் மீது புகார் கொடுத்துள்ளார் என்று தெரிந்த அடுத்த நிமிடமே தானும் பத்திரிகையாளர்களை சந்திக்க போவதாக கூறினார்.

பின்னர் பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவர், “எனக்கும், என் மனைவிக்கும் எந்த பிரச்னையும் கிடையாது. நான் பேட்டி கொடுப்பதால் எனது மனைவிக்கும், என் குழந்தைகளுக்கும் ஆபத்து வந்துவிடும் என்று அவ்வாறு கூறியுள்ளார். திருமணமான 23 ஆண்டுகளாக எந்த பிரச்னையும், கருத்து வேறுபாடும் கிடையாது. அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தூண்டுதல்பேரில், தாரமங்கலம் ஒன்றியம், கோனகபாடி முன்னாள் பஞ்சாயத்து தலைவர் மோகன் என்பவர் எனது மனைவியிடம் பேசி, புகார் கொடுக்க வைத்து, கோவையில் சி.பி.சி.ஐ.டி போலீஸார் முன்பு ஆஜராகாமல் இருக்க முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இது எல்லாம் கருத்தில் கொண்டு சி.பி.சி.ஐ.டி உடனடியாக என்னை அழைத்து விசாரிக்க வேண்டும். என் உயிருக்கு ஆபத்து உள்ளது. நாள்கள் கடந்து போகபோக, நீர்த்து போய் வருகிறது. அதுமட்டுமல்லாது எடப்பாடி பழனிசாமி கொங்கணாபுரம் பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க புள்ளி ஒருவரை வைத்து பேரம் பேசுவதற்கு வந்தார். அதற்கு நான் சம்மதிக்கவில்லை. எனக்கு கொடநாடு வழக்கில் உண்மை வெளிவர வேண்டும்” என்றார்.


மேலும் படிக்க கொடநாடு: `என் மனைவியை தூண்டிவிடுகிறார் எடப்பாடி; பேரம் பேச ஆள்கள் அனுப்புகிறார்’ - தனபால்
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top