ஆஜராக சம்மன்; தயாராக இருந்த போலீஸார் - ஆஜராகாமல் கடிதம் வழங்கிய சீமான் - பின்னணி என்ன?!

0

நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின் பெயரில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் ஆஜராகும்படி செப்டம்பர் 9-ம் தேதியன்று சம்மன் வழங்கியது வளசரவாக்கம் காவல்துறை. செப்டம்பர் 12-ம் தேதி சீமான் ஆஜராவர் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் நேற்றும்(12-09-2023) ஆஜராகவில்லை. மாறாக சீமான் தரப்பில் இரு கடிதங்கள் வழங்கப்படிருப்பதாக தகவல்கள் வரவே அதுகுறித்து விசாரித்தோம்.

நடிகை விஜயலட்சுமி, சீமான்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிவிட்டார் என நடிகை விஜயலட்சுமி தொடர்ச்சியாகவே வீடியோ வெளியிட்டு குற்றம்சாட்டி வருகிறார்.

கடந்த 2011-ம் ஆண்டு இதுதொடர்பாக சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகாரும் அளித்திருந்தார். 12 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி சென்னை கமிஷனர் அலுவலகத்திலும் புகார் அளித்திருந்தார். மேலும் சீமானை கைது செய்யும் வரை விடப் போவதில்லை எனச் சூடாக பேசியிருந்தார். பிறகு புகார் கொடுத்த விஜயலட்சுமியை பலமுறை அழைத்து விசாரித்தது காவல்துறை. இந்நிலையில் இதுதொடர்பான விசாரணைக்கு ஆஜராக சீமானுக்கு சம்மன் வழங்கினர் வளசரவாக்கம் காவல்துறையினர்.

செப்டம்பர் 11-ம் தேதி ஈரோட்டில் செய்தியாளர்களை சந்திப்பில் பங்கேற்றபோது வளசரவாக்கம் காவல் நிலைய சம்மன்படி ஆஜாராவீர்களா... என்ற கேள்விக்கு ``ஆஜர் ஆவேன்” என பதிலளித்திருந்தார். மறுபுறம் வளசரவாக்கம் காவல்நிலையமும் செப்.12-ம் தேதி காலை 9 மணி முதலே பரபரப்பாக காணப்பட்டது. சீமான் வந்தால் என்னென்ன பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வார்களோ அவையெல்லாம் செய்யப்பட்டிருந்தன. மேலும் நூற்றுக்கணக்கான தொண்டர்களும் திரண்டனர். கட்சியின் ஊடகப்பிரிவினர், தலைமை நிர்வாகிகளும் வளசரவாக்கம் காவல்நிலைய பகுதிக்கு வந்திருந்தனர், சீமான் ஆஜராவதற்கான சாத்தியக்கூறுகள் அனைத்தும் வளசரவாக்கம் காவல் நிலைப் பகுதியில் தென்பட்டன. ஆனால் அவர் வரவேயில்லை.

நம்மிடம் பேசிய விவரமறிந்தவர்கள், ”நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராகிறார் என்ற தகவல் பரவியிருந்தாலும், ஆஜாராகும் திட்டமே சீமானிடம் இல்லை. சம்மன் வழங்கியதுமே அவரின் வழக்கறிஞர்களுடன் கலந்தாலோசித்திருக்கிறார் சீமான். அப்போதே வழக்கறிஞர்கள் மட்டும் சென்று விளக்கமளித்தால் போதுமென முடிவு எடுக்கப் பட்டிருக்கிறது” என்றனர்.

வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜரான வழக்கறிஞர் பாசறை செயலாளர் சங்கர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் சீமான் வழங்கியதாக இரு கடிதங்களை காவல் ஆய்வாளரிடம் கொடுத்திருக்கிறார்கள் என்பது கவனிக்கத்தக்கது

சீமான் வழங்கிய கடிதத்தில் என்ன இருந்தது என விசாரித்தோம். அது குறித்து நம்மிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் முக்கிய புள்ளிகள், ``முதலில் செப்டம்பர் 12-ம் தேதி ஆஜராக முடியாத காரணத்தை முதலில் விவரித்துள்ளார் சீமான். மேலும் 2011-ம் ஆண்டு சீமான் மீது விஜயலட்சுமி புகார் அளித்தார். ஆனால் அதன்மீது மேல்விசாரணை வேண்டாமென விஜயலட்சுமியே கடிதம் கொடுத்துவிட்டார்.

இந்நிலையில் 12 ஆண்டுகளுக்கு பிறகு அதே வழக்கில் சீமானை விசாரணக்கு அழைக்கிறீர்களா... அல்லது தற்போது புதிய புகார்கள் ஏதேனும் சீமான் மீது பதியப்பட்டிருக்கிறதா... புதிதாக வழக்குகள் பதியப்பட்டிருந்தால் எந்த பிரிவுகளின் கீழ் பதியப்பட்டுள்ளது... அவ்வாறில்லாமல் பழைய வழக்குகளை தொடர்கிறீர்கள் என்றால் நீதிமன்ற ஒப்புதலை பெற்றுள்ளீர்களா.. என்ற கேள்விகளையெல்லாம் உள்ளடிக்கிய கடிதங்களை சீமான் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வளசரவாக்கம் காவல் ஆய்வாளரிடம் கொடுத்திருக்கிறார்கள்” என்றனர்

பாத்திமா பர்கானா

நம்மிடம் பேசிய இளைஞர் பாசறை மாநிலச் செயலாளர் பார்த்திமா பர்கானா ``விசாரணைக்கு வரும்படி சம்மன் அளித்த போலீஸார், எந்தவித முறையான விளக்கத்தையும் தரவில்லை. 2011-ல் பதிவு செய்யப்பட்ட வழக்கா... புதிய வழக்குகள் என்ற அடிப்படை தகவல்களை கூட இல்லை. போதிய விளக்கத்தை போலீஸார் கொடுத்தப்பின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுப்போம்” என்றார் சுருக்கமாக.


மேலும் படிக்க ஆஜராக சம்மன்; தயாராக இருந்த போலீஸார் - ஆஜராகாமல் கடிதம் வழங்கிய சீமான் - பின்னணி என்ன?!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top