`ஒரே நாடு; ஒரே தேர்தல் வேண்டாம் என்பவர்கள் ஊழல்வாதிகள்' எனும் அண்ணாமலையின் கருத்து? - ஒன் பை டூ

0

ஏ.பி.முருகானந்தம், மாநிலப் பொதுச்செயலாளர், பா.ஜ.க

``உண்மைதான். ஊழல் செய்பவர்களுக்குத்தான் இந்தத் திட்டம் ஊசி குத்தியது போலிருக்கும். மற்றபடி, இந்த நடைமுறையால் அரசின் தேர்தல் செலவும், அதிகாரிகள், ஆசிரியர்களின் பணிச்சுமையும் பல மடங்கு குறையும். நம் பாரதத்தில் 1964-ம் ஆண்டுக்கு முன்பு வரை நாடு முழுவதும் ஒரே தேர்தல் முறைதானே இருந்தது... அரசியல் காரணங்களுக்காக இந்த முறையை மாற்றினார்கள். இவ்வளவு ஏன்... 1971-ம் ஆண்டு கருணாநிதியே இந்தத் திட்டத்துக்கு ஆதரவாகப் பேசியிருக்கிறார். `நாடாளுமன்றத் தேர்தலுடன், சட்டமன்ற தேர்தலையும் நடத்துவது நலம்’ என்று சொல்லி தி.மு.க சார்பில் தீர்மானமே நிறைவேற்றப்பட்டிருக்கிறது. ஆனால், இன்று அந்தத் திட்டத்தை அவர்களே எதிர்க்கிறார்கள். தி.மு.க ஆட்சிக்கு வந்து 30 மாதங்கள் ஆகின்றன. ஆனால், இதுவரை சொன்ன எதையுமே மக்களுக்குச் செய்துகொடுக்கவில்லை. எங்கு பார்த்தாலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது. ஓர் அமைச்சர் சிறையில் இருக்கிறார்... இன்னும் சிலர் சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கித்தவிக்கிறார்கள். இந்தச் சூழலில் தமிழ்நாட்டில் தேர்தல் வந்தால் தி.மு.க பெரும் தோல்வியைச் சந்திக்கும். அதனால்தான், ‘ஒரே நாடு; ஒரே தேர்தல், கூட்டாட்சி அமைப்பைக் குழிதோண்டிப் புதைக்கும் முயற்சி’ என்று பேசிவருகிறார் முதல்வர் ஸ்டாலின். அன்று ஒரு பேச்சு, இன்று ஒரு பேச்சு என்பது தி.மு.க-வின் ரத்தத்தில் ஊறிப்போன ஒன்று.’’

ஏ.பி.முருகானந்தம், தமிழன் பிரசன்னா

தமிழன் பிரசன்னா, செய்தித் தொடர்பு இணைச் செயலாளர், தி.மு.க

``ஊழல் குறித்துப் பேச பா.ஜ.க-வுக்கு என்ன அருகதை இருக்கிறது... சி.ஏ.ஜி அறிக்கையில் பா.ஜ.க அரசின் 7.5 லட்சம் கோடி ரூபாய் ஊழல் வெளிவந்திருக்கிறது. வெறும் ஒன்பது ஆண்டுகளில் உலகிலேயே பணக்காரக் கட்சியாக மாறியிருக்கிறது பா.ஜ.க. அவ்வளவு ஏன்... 2,700 கோடி ரூபாயில் அமைக்கப்பட்ட ஜி20 மண்டபம் ஒரு நாள் மழையில் மிதப்பதிலேயே இவர்களின் ஊழல் அம்பலப்பட்டு நிற்கிறது. பொய்யிலேயே பிறந்து... பொய்யிலேயே வளர்ந்து... பொய் சொல்லியே ஆட்சிக்கு வந்த பா.ஜ.க., `ஒரே தேர்தலை கலைஞர் ஆதரித்தார்’ என்ற பொய்யையும் சொல்கிறது. தலைவர் கலைஞரும், தி.மு.க-வும் எந்தக் காலத்திலும் ‘ஒரே நாடு; ஒரே தேர்தலு’க்கு ஆதரவாகப் பேசியதே கிடையாது. பா.ஜ.க சொல்கிறபடி ஒரே தேர்தல் திட்டம் வந்தால், அதுதான் இந்தியா இனி சந்திக்கும் ஒரே தேர்தலாக... கடைசித் தேர்தலாக இருக்கும் என்பதால்தான் எதிர்க்கட்சிகள் எதிர்க்கின்றன. அடுத்தடுத்து தேர்தல்கள் வந்தால், பா.ஜ.க-வால் இனி ஆட்சிக்கே வர முடியாது என்பதால்தான், ஒரே தேர்தல் திட்டத்தின் மூலம் ஜனநாயகத்தைப் படுகொலை செய்து, சர்வாதிகாரத்தை அமல்படுத்தத் துடிக்கிறார்கள் பா.ஜ.க தலைவர்கள். இந்திய ஜனநாயகத்தைக் காக்க, நம் மக்களுக்குக் கிடைத்திருக்கும் கடைசி வாய்ப்பு... 2024 மக்களவைத் தேர்தல். அதில் பா.ஜ.க-வுக்கு மக்கள் சம்மட்டியடி கொடுக்க வேண்டும்.”


மேலும் படிக்க `ஒரே நாடு; ஒரே தேர்தல் வேண்டாம் என்பவர்கள் ஊழல்வாதிகள்' எனும் அண்ணாமலையின் கருத்து? - ஒன் பை டூ
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top