ஒன்றாக மது அருந்திய அண்ணன், தங்கை! - திடீர் சண்டையில் அண்ணனை அடித்துக் கொன்ற தங்கை

0

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகே இருக்கிறது கொமராபாளையம். இந்த ஊராட்சியில் இருக்கும் கீழ்பாலப்பட்டியைச் சேர்ந்தவர் செல்லமுத்து. இவருடைய மனைவி வரதம்மாள். செல்லமுத்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு பாண்டியன் (55) என்ற மகனும், சியாமளா (48) என்ற மகளும் உள்ளனர். இதில், கூலி தொழிலாளியான பாண்டியனுக்கு இரண்டு திருமணங்கள் நடைபெற்று, இரண்டு மனைவிகளுடன் மணப்பள்ளி பகுதியில் வசித்து வந்தார். அதேபோல், அவரது தங்கையான சியாமளாவிற்கும் திருமணமாகி கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக அவரை பிரிந்து தாய் வரதம்மாள் வீட்டில் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், இவர்களின் தாயாரான வரதம்மாள் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வயோதிக காரணமாக இறந்து விட்டார்.

கொலை

இதனால் பாண்டியன் கீழ்பாலப்பட்டிக்கு வந்து தாயாருக்கு இறுதி சடங்கு செய்து விட்டு, தங்கையுடன் தங்கி இருந்தார். இதனிடையே, அண்ணன், தங்கை இருவருக்கும் மது குடிக்கும் பழக்கம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இருவரும் தாய் இறந்த நாளில் இருந்து அடிக்கடி ஒன்றாக அமர்ந்து மது குடித்து வந்தனர். அதன்படி, நேற்று முந்தினமும் ஒன்றாக அமர்ந்து மது குடித்துள்ளனர். அப்போது, இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் இருவருக்கும் ஏற்பட்ட சண்டை முடிவுக்கு வர, அதன்பின்னர் பாண்டியன் மதுபோதையில் அங்கேயே படுத்து தூங்கியிருக்கிறார்.

அதேநேரம், தனது அண்ணன் மீதான கோபம் குறையாமல் இருந்த சியாமளா, வீட்டில் இருந்த அடுப்பு ஊதும் இரும்பு குழலை எடுத்து பாண்டியன் தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த பாண்டியன், துடிதுடித்தபடி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, அங்கிருந்தபடி சியாமளா, தனது சகோதரனான பாண்டியனின் மகனான தனபால் என்பவரிடம், 'உனது தந்தை கீழே தவறி விழுந்து இறந்துவிட்டார். சீக்கிரம் வா' என்று கூறியிருக்கிறார்.

பரமத்தி வேலூர்

இதனால், அதிர்ச்சியடைந்த தனபால், உடனடியாக கீழ்பாலப்பட்டிக்கு வந்து தந்தையின் உடலை பார்த்து கதறி அழுதுள்ளார். அப்போது, தனது தலையில் காயம் இருந்ததால் சந்தேகம் அடைந்த அவர், இதுபற்றி மோகனூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் மோகனூர் காவல் நிலைய ஆய்வாளர் தங்கவேல் வழக்கு பதிவு செய்தார். அதோடு, உடன்டியாக சம்பவ இடத்திற்கு சென்று பாண்டியன் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். பின்னர், இதுகுறித்து விசாரணை நடத்திய போலீஸார், பாண்டியனை கொலை செய்தது அவரது தங்கையான சியாமளாதான் என்பதை கண்டறிந்தனர். அதனைத்தொடர்ந்து, பாலப்பட்டி பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த சியாமளாவை போலீஸார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் பெண் ஒருவர் தனது சகோதரரையே அடித்துக் கொலை செய்துள்ள சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.


மேலும் படிக்க ஒன்றாக மது அருந்திய அண்ணன், தங்கை! - திடீர் சண்டையில் அண்ணனை அடித்துக் கொன்ற தங்கை
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top