ஒன் பை டூ

0

இனியன் ராபர்ட், மாநில செய்தித் தொடர்பாளர், காங்கிரஸ்

“ஒன்பது ஆண்டுக்காலம் ஆட்சியில் இருந்துவிட்டு, தேர்தல் நெருக்கத்தில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவைக் கொண்டுவருவதும், அதுவும் இந்தத் தேர்தலில் அமல்படுத்தப்படாது என்று சொல்வதும் பா.ஜ.க-வினருக்கு இதில் துளியும் ஆர்வம் இல்லை என்பதைத்தானே காட்டுகிறது... உயர்சாதி ஏழைகளுக்கான இட ஒதுக்கீட்டை ஒரே நாளில் அமல்படுத்தினார்களே, அப்போது மட்டும் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தினார்களா என்ன... இப்போதல்ல, 2029 தேர்தலில் மகளிர் இட ஒதுக்கீடு அமலுக்கு வந்தாலும்கூட, இவர்கள் பெண்கள் என்ற பெயரில் உயர்சாதியினரை மட்டும்தான் எம்.பி., எம்.எல்.ஏ-வாக ஆக்குவார்கள். இதையெல்லாம் கருத்தில்கொண்டுதான், மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது பெறப்பட்ட சாதிவாரி விவரங்களையெல்லாம் மக்களவையில் வெளியிட ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்காலத்திலேயே காங்கிரஸ் முயன்றது. ஆனால், அது நடந்துவிடக் கூடாது என்று திட்டமிட்டே 2ஜி விவகாரத்தைக் கையிலெடுத்து நாடாளுமன்றத்தை முடக்கினார்கள் பா.ஜ.க-வினர். பிறகு 2014 தேர்தலில் ஓ.பி.சி சமூகத்தைச் சார்த்த மோடி பிரதமரானால், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு விவரம் உடனடியாக வெளியிடப்படும் என்று சொல்லியே ஆட்சிக்கும் வந்தார்கள். சொன்னதையும் செய்யவில்லை... இயல்பாக 2021-ல் எடுக்கப்படவேண்டிய மக்கள்தொகை கணக்கெடுப்பையும் நடத்தவில்லை. ஏற்கெனவே மண்டல் கமிஷன் அறிக்கையால் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு அமலுக்கு வந்தபோது, அதை எதிர்த்து யாத்திரை நடத்தி, நாட்டையே கலவரக் காடாக்கிய பாசிச பா.ஜ.க கும்பல், தேர்தல் வந்ததும் சமூகநீதிக்காக நிற்பதுபோல நாடகமாடுகிறது. ஆனால், மக்கள் இனியும் ஏமாற மாட்டார்கள்.”

இனியன் ராபர்ட், நாராயணன் திருப்பதி

நாராயணன் திருப்பதி, மாநிலத் துணைத் தலைவர், பா.ஜ.க

“ராகுல் காந்தி விவரம் தெரியாமல் உளறிக்கொண்டிருக்கிறார். `செய்வன திருந்தச் செய்’ என்பார்களே... அப்படி வரப்போகும் காலங்களில் தொகுதிகள் மறுவரையறை செய்யப்படவிருப்பதால், அதையும் கணக்கில்கொண்டு மகளிர் இட ஒதுக்கீட்டை அமல்படுத்தவிருக்கிறது பா.ஜ.க அரசு. இந்தச் சாதாரண பொது அறிவுகூட இல்லாமல், ராகுல் காந்தி மலிவான விளம்பரத்துக்காகப் பேசுகிறார். இந்த ஒதுக்கீடு வந்துவிடக் கூடாது என்பதற்காகவே ராகுல் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்துகிறார். வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் நான்கு முறை இந்த மகளிருக்கான இட ஒதுக்கீடு மசோதா கொண்டுவரப்பட்டது. ஆனால், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு இல்லாத ஒரே காரணத்தால்தான் இந்த மசோதா நிறைவேறவில்லை. இப்போதும்கூட மசோதாவை ஏற்றுக்கொள்வதுபோல ஆதரவு தெரிவித்துவிட்டு, குழப்பத்தை ஏற்படுத்தவே காங்கிரஸார் முயல்கிறார்கள். பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான ஒதுக்கீட்டையும், மகளிர் இட ஒதுக்கீட்டையும் ஒப்பிடுவது அபத்தமானது. இப்போது ஓ.பி.சி மக்களுக்காகப் பேசும் காங்கிரஸ், இத்தனை ஆண்டுக்காலம் ஆட்சிப் பொறுப்பிலிருந்தபோது எத்தனை ஓ.பி.சி மக்களுக்குத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்தது... காங்கிரஸுக்கு ஓ.பி.சி இட ஒதுக்கீடு குறித்துப் பேச எந்த அருகதையும் இல்லை. வி.பி.சிங் ஆட்சியில் மண்டல் கமிஷன் பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டபோது, ‘சாதிரீதியான இட ஒதுக்கீடு என்பது நாட்டைப் பிளக்கும் செயல்’ என்று சொன்ன ராஜீவ் காந்தியின் மகன், இன்று இந்த நாட்டை சாதிரீதியாகப் பிளக்க முற்படுகிறாரா என்பதே என் கேள்வி!”


மேலும் படிக்க ஒன் பை டூ
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top