``சனாதனம்... பயங்கரவாதம் நிறைந்த கோட்பாடு” - சாமியார் விவகாரத்தில் திருமாவளவன் கடும் தாக்கு

0

சென்னை வள்ளூவர் கோட்டத்தில் மத்திய அரசின் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை எதிர்த்து திராவிடர் கழகம் சார்பில் கண்டன பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ், சி.பி.ஐ, சி.பி.எம், விடுதலை சிறுத்தைகள், தி.மு.க உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், சமூக இயக்கங்களும் பங்கேற்றன. இதில் கண்டன உரையாற்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் எம்.பி-யுமான தொல்.திருமாவளவன் சனாதனம், இந்திய கூட்டணி மற்றும் அ.தி.மு.க மீதான விமர்சனம் என அவரின் பேச்சில் கவனம் பெற்றவை இங்கே!

திருமாவளவன்

``மத்திய அரசின் திட்டமென்பது குலத்தொழிலை ஊக்குவிக்கும் ஒரு சதித்திட்டம்” என பேச ஆரம்பித்த திருமா, தொடர்ந்து ``சனாதானத்தை ஒழிப்போம் என அமைச்சர் உதயநிதி பேசியதற்கு ஒரு சாமியார் தலையை வெட்டினால் 10 கோடி என அறிவிக்கிறார். இந்த அறிவிப்பு என்பதே தீவிரவாதம்தான். சனாதனம் என்பது எவ்வளவு பயங்கரவாதம் நிறைந்த கோட்பாடு என்பதற்கு இந்த அறிவிப்பே ஒரு சான்று. அமைச்சர் உதயநிதி தி.மு.க தலைவர் ஸ்டாலினின் பிள்ளை, அதுதான் பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் கும்பலின் பிரச்னை.

I.N.D.I.A கூட்டணியிலிருந்து தி.மு.க-வை கழற்றிவிட வழி தேடுகிறார்கள், இனி I.N.D.I.A கூட்டணியை எந்த சக்தியாலும் தகர்க்க முடியாது. I.N.D.I.A கூட்டணி உருவாகிட தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கு மகத்தான பங்கு உண்டு என்பதை கூட்டணி தலைவர்களே அறிவார்கள். தி.மு.க இல்லாமல் I.N.D.I.A கூட்டணி இல்லை. ஆகவேதான் தி.மு.க-வை குறிவைத்து விமர்சிக்கிறார்கள்.

திருமாவளவன் - எடப்பாடி பழனிசாமி

இது 100% வாக்கு வங்கிக்கான வேலை. ஆர்.எஸ்.எஸ் வலையில் சிக்கிவிடாமல் இந்துக்கள் தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸை கடுமையாக சாடிய திருமா, ஒருகட்டத்தில் அ.தி.மு.க-வையும் விமர்சித்தார். ``தமிழ்நாட்டில் பா.ஜ.க-வுக்கு முட்டு கொடுப்பது அ.தி.மு.க தான். காணாமல் போவதற்கான எல்லா வேலைகளை அவர்கள் செய்கிறார்கள். 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு அ.தி.மு.க எங்கே இருக்கிறது என தேடும் நிலை வந்துவிடும். பா.ஜ.க-வே அ.தி.மு.க-வை காலி செய்துவிடும்” எனப் பேசினார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY


மேலும் படிக்க ``சனாதனம்... பயங்கரவாதம் நிறைந்த கோட்பாடு” - சாமியார் விவகாரத்தில் திருமாவளவன் கடும் தாக்கு
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top