நோய்வாய்பட்டு கிடந்த முதியவர்: ஆம்புலன்ஸுக்காக காத்திருக்காமல் தள்ளுவண்டியில் அழைத்துவந்த நபர்!

0

விருதுநகர் யானைக்குழாய் தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 45), கொத்தனார் வேலை செய்து வருகிறார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு, இவருடன் கொத்தனார் வேலை செய்து வந்த ஆறுமுகம் என்பவர் தற்போது ஆதரவின்றி தெருக்களில் சுற்றித்திரிவதாக கூறப்படுகிறது. தூத்துக்குடியைச் பூர்வீகமாக கொண்ட ஆறுமுகம், வீட்டை விட்டு வெளியேறி விருதுநகரில் பிழைக்க வந்துள்ளார். இங்கு, கிடைத்த வேலைக்கு சென்று வயிற்றுப்பிழைப்பு நடத்தி வந்த அவர், வயது முதிர்வின் காரணமாக தொடர்ந்து வேலைக்கு செல்ல இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், ஆதரவற்ற நிலையில் இருப்பதால் தங்குவதற்கு இடமோ, சரியான உணவோ கிடைக்காமல் தினம் அல்லல்பட்டு வந்த ஆறுமுகம், விருதுநகர் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்துக்கு கீழ் உண்டு, உறங்கி நாள்களை கழித்து வந்துள்ளார்.

சிகிச்சைக்கு அனுமதி

இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே ஆறுமுகம் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதையறிந்து அங்கு வந்த சுரேஷ்குமார், தன்னுடன் பணிபுரிந்த ஆறுமுகத்தின் நிலையை கண்டு அதிர்ச்சி அடைந்திருக்கிறார். இதையடுத்து அவரை மீட்டு, விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்க முடிவுசெய்த சுரேஷ்குமார், தன்னிடம் செல்போன் இல்லாததால் ஆம்புலன்ஸை அழைப்பதற்காக அருகில் இருந்தவர்களின் உதவியை நாடியிருக்கிறார். ஆனலும், அது கைகொடுக்காமல் போகவே, அங்கு நின்றிருந்த தள்ளுவண்டியில் ஆறுமுகத்தை அமரச்செய்து மருத்துவமனை நோக்கி புறப்பட்டுள்ளார்.

சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரம் தள்ளுவண்டியில் ஆறுமுகத்தை வைத்து தள்ளியவாறே விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வந்த அவர், அங்கு அவசர சிகிச்சைப்பிரிவில் ஆறுமுகத்தை சிகிச்சைக்காக அனுமதித்தார். இதைத்தொடர்ந்து விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆறுமுகம் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

தள்ளுவண்டி

இதுகுறித்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வட்டாரத்தில் விசாரிக்கையில், "ஆறுமுகத்திக்கு சிறந்த முறையில் மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. அவர் நலமுடன் இருப்பதாக" தெரிவித்தனர். இந்த செயல் குறித்து சுரேஷ்குமாரிடம் பேசிட முயற்சி செய்தோம். ஆனால் உடனடியாக அவரை தொடர்புகொள்ள முடியவில்லை. உறவுகள் மீது நம்பிக்கையற்று தங்களை தாங்களே தனிமைப்படுத்திக்கொண்டு வாழ்பவர்கள் மத்தியில், உடன் பழகியவரின் உயிரை காப்பதற்காக நோய்வாய்பட்ட நண்பரை மூன்று கிலோமீட்டர் தூரம் தள்ளுவண்டியில் அழைத்து வந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்த சுரேஷ்குமாருக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.


மேலும் படிக்க நோய்வாய்பட்டு கிடந்த முதியவர்: ஆம்புலன்ஸுக்காக காத்திருக்காமல் தள்ளுவண்டியில் அழைத்துவந்த நபர்!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top