``திமுக-வின் ஊழலை ஒழிக்கவே டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை மோடி கொண்டு வந்தார்!” - சொல்கிறார் அண்ணாமலை

0

விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிப்புத்தூர், ராஜபாளையம் தொகுதிகளில் தமிழக பா.ஜ.க.தலைவர் அண்ணாமலையின் என் மண், என் மக்கள் நடைபயண நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் புதிய தமிழகம் கட்சித்தலைவர் கிருஷ்ணசாமி கலந்துக்கொண்டார். ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்த நடைபயண நிகழ்ச்சியின்போது, ஆண்டாள் கோயில் அருகே கோகுலஷ்டமியை முன்னிட்டு உறியடி ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதில் கலந்துக்கொண்ட பா.ஜ.க.தலைவர் அண்ணாமலை, கண்களை கட்டிக்கொண்டு உறியடித்தார்.

இதையடுத்து நெசவாளர்கள் அணி சார்பில் கைநூல் நூற்பு காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இதை பார்வையிட்ட அண்ணாமலை, இராட்டையில் நூல்நூற்பு செய்தார். தொடர்ந்து அவர் மக்களை சந்தித்து உரையாற்றுகையில், "மத்திய அரசு பதவியேற்று பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான இந்த 9 ஆண்டுக்கால ஆட்சியில் நாடு நிறைய மாற்றம் கண்டிருக்கிறது.

நடைபயணம்

குறிப்பாக, காங்கிரஸ் ஆட்சிக்காலத்திலே 11-வது இடத்திலிருந்த நமது நாடு, பல படிகள் முன்னேறி உலகில் 5-வது பெரிய பொருளாதார நாடாக உருமாறியுள்ளது. ஆனால் தமிழகத்தில் கடந்த 30 மாதங்களாக தி.மு.க நடத்திவரும் ஆட்சியில் தினமும் செய்தித்தாள்களில் வெட்டு, கொலை, ஊரெங்கும் கஞ்சா, டாஸ்மாக் போன்ற சட்டம் ஒழுங்கு சீர்கேடு தொடர்பான செய்திகளைத்தான் பார்த்து வருகிறோம். சரித்திரத்தில் இதுபோன்ற மோசமான ஊழல் அரசு எதுவுமில்லை.

தமிழகத்தில் ஒரு குடும்பத்தின் வளர்ச்சிக்காக ஆட்சி, அரசு நடக்கிறது. அடிப்படை வசதிகள், சாதியில்லா சமூகம், சமூக ஏற்றத்தாழ்வுகள், டாஸ்மாக் பிரச்னை, ஊழல் குற்றச்சாட்டு என பல முக்கிய பிரச்னைகளை பற்றி பேச வேண்டிய நேரத்தில் இவர்கள் சனாதன தர்மத்தை பற்றி பேசுகிறார்கள்.

சனாதன தர்மம் ஆதி, முடிவு இல்லாதது. நமது வாழ்வியல் முறையோடு சனாதன தர்மம் கலந்திருக்கிறது. இதைத்தான் அவர்கள் உடைத்தெறிய வேண்டும் என்கிறார்கள். எல்லோரும் சாமி கும்பிடுவதற்காக கோயிலுக்கு சென்றால் தி.மு.க.காரர்கள் கோயில் உண்டியலில் எவ்வளவு பணம் இருக்கிறதென்பதை பார்ப்பதற்காக கோயிலுக்கு செல்கிறார்கள். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒரு குழப்பவாதி. தினம், தினம் என்ன பேசுவதென்றே தெரியாமல் பேசி வருகிறார்.

உறியடித்தல்

இந்த லட்சணத்தில் அரசுக்கு ஒத்துழைப்பு தருவதில்லை என்று ஒருபக்கம் பேசிவருகிறார்கள். லஞ்சத்தை ஒழிக்க, டாஸ்மாக் ஊழல்களை ஒழிக்க, மதுக்கடைகளை மூட, மதுவில்லா தமிழகம் படைக்க, சாதிய கோட்பாடுகளை களைய தி.மு.க. அரசோடு கைகோர்த்து செயல்பட நாங்கள் தயார். ஆனால் சனாதன தர்மத்தை அழிப்பதற்கு நாங்கள் ஒருபோதும் துணை நிற்கமாட்டோம். அந்த பாவத்தையும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.

நாத்திகவாதி, ஆத்திகவாதி என்று இங்கு யாருக்கு வேண்டுமானாலும் வாக்களித்து விடலாம். ஆனால், நாத்திக்கவாதி, ஆத்திகவாதி போல் குழப்பவாதிகளாக இருப்பவர்களுக்கு மட்டும் நீங்கள் வாக்களிக்கக் கூடாது. மத்திய அரசு என்னத்திட்டம் கொண்டுவந்தாலும் அதில் தங்களுக்கு எவ்வளவு லாபம் வருகிறதென்றுதான் தி.மு.க.வினர் பார்க்கிறார்கள்.

நூல் நூற்புதல்

இந்த ஊழலை ஒழிப்பதற்குதான் டிஜிட்டல் பணபரிவர்த்தனையை பிரதமர் கொண்டுவந்தார். இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை கொண்டுவந்ததே தி.மு.க.வின் ஊழலை அழிக்கத்தான். தி.மு.க. பற்றி முழுமையாக புரிந்துக்கொண்டுதான் பிரதமர் மோடி டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை அறிமுகப்படுத்தியுள்ளார்.

நடைபயணத்தில்...

தமிழகத்தில் என்ன நடக்கிறதென்றும் தெரியாமல், மத்திய அரசின் நலத்திட்ட கூட்டங்களில் என்ன பேசுகிறார்கள் என்று புரியாமலும், பதில் எதுவும் பேசத் தெரியாத பொம்மை முதலமைச்சராக மு.க.ஸ்டாலினை கடந்த 30 மாதங்களாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். இது ஒருபக்கம் என்றால், மாட்டிற்கு பால் காம்பில் இருந்து வருகிறதா?, கொம்பில் இருந்து வருகிறதா? என தெரியாத ராகுல்காந்தி மறுப்பக்கம். ஆகவே, மக்களை நன்கு அறிந்தவரும், ஏழைகளின் பங்காளனுமாய் இருக்கிற பிரதமர் நரேந்திர மோடியின் கரங்களை நீங்கள் வலுப்படுத்த வேண்டும்" என்று பேசினார்.


மேலும் படிக்க ``திமுக-வின் ஊழலை ஒழிக்கவே டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை மோடி கொண்டு வந்தார்!” - சொல்கிறார் அண்ணாமலை
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top