முதலாம் உலகப்போரின் அதிர்வுகள்: நடுநிலை என்று தீர்மானித்த அமெரிக்கா, பின்னர் போரில் பங்கேற்றது ஏன்?

0
முதலாம் உலகப்போர் தொடங்கிய காலகட்டத்தில் அப்போதைய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் உட்ரோ வில்சன், இந்தப் போரில் தங்கள் நாடு நடுநிலை வகிக்கும் என்று தீர்மானித்தார். 'இந்த விஷயத்தில் நான் ரொம்ப ஸ்ட்ரிக்ட்' என்று வேறு அறிவித்தார். தங்கள் நாட்டுக்குப் போரினால் எந்தப் பாதிப்பும் வந்துவிடக் கூடாதே என்கிற கவலை அதில் தெரிந்தது. என்றாலும் இந்த வைராக்கியம் நீண்ட காலத்துக்கு நீடிக்கவில்லை. நேச நாடுகளுக்கு அமெரிக்கா நட்புக்கரம் நீட்ட வேண்டிய கட்டாயமும் வந்தது.

ஒருவிதத்தில் பார்க்கப்போனால் அமெரிக்கா இந்தப் போரில் ஈடுபட வேண்டிய அவசியமே இல்லை. புவியியல் அமைப்பின்படி ஐரோப்பிய நாடுகள் ஒன்றுக்கொன்று வெகு அருகே அமைந்திருந்தன. அவை போரில் ஈடுபடுவது காலத்தின் கட்டாயமானது. ஆனால் அமெரிக்கா அவற்றிலிருந்து தொலைவிலிருந்த நாடு, கடலால் பிரிக்கப்பட்ட நாடு. அது வேறு கண்டமும் கூட. தவிரப் பிற நாடுகளின் வெளியுறவு விஷயங்களில் தலையிடக் கூடாது என்ற கொள்கையை அப்போது அமெரிக்கா கொண்டிருந்தது.கூட்டு நாடுகள் என்ற பிரிவை அப்போது அமெரிக்கா வைத்திருக்கவில்லை.

I am neutral but not afraid of any of them 1915 - USA World War I poster

தவிர அதற்கு முந்தைய வருடங்களில் பல சோதனைகளை அனுபவித்திருந்தது அமெரிக்கா. 1920ல் மதுவிலக்கு அமல்படுத்தப்பட, அதற்கு எதிரான பல குற்றங்கள் நாட்டையே ஆட்டிப்படைத்தன. 1930களில் அந்த நாடு ஒரு பெரும் பொருளாதார வீழ்ச்சியைச் சந்தித்தது. அப்போது வேலை இல்லாத் திண்டாட்டம் வறுமை போன்றவை லட்சக்கணக்கான அமெரிக்கர்களை ஆட்டிப்படைத்தது. இந்தக் காலகட்டத்தில் மாபெரும் புழுதிப் புயல்கள் (Dust Bowls) வீச நாட்டில் பஞ்சம் ஏற்பட்டது. தவிர இந்தப் புயல்களால் விவசாயத்தை போதிய அளவு செய்ய முடியாமல் போனது. ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்குக் குடியேற்றங்கள் பெருமளவில் நடைபெறத் தொடங்கி இருந்தன. ஆக, பெரும் சேதங்களை அனுபவித்திருந்த அமெரிக்க மக்கள் தங்களுக்கு நேரடித் தொடர்பில்லாத உலகப்போரில் தங்கள் நாடு ஈடுபடுவதைச் சிறிதும் விரும்பவில்லை. ஜனாதிபதி உட்ரோ வில்சன் அமெரிக்கா நடுநிலைமையைத்தான் வகிக்கும் என்று கூறியதற்கு மக்களின் இந்த மனப்போக்கும் ஒரு முக்கிய காரணம்.

என்றாலும் அமெரிக்கா தன் நிலையை மாற்றிக் கொண்டது. நேச நாடுகளின் பக்கம் சாய்ந்தது. இதற்கு ஒரு முக்கிய காரணம் ஜெர்மனி இந்தப் போரில் தங்கு தடையில்லாமல் பயன்படுத்திய நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதல்கள். இது நேரடியாக அமெரிக்காவையும் பாதித்தது.

1915இல் பிரிட்டிஷ் கப்பலான RMS லூசிடானியா என்பதை ஜெர்மனியின் போர்க்கப்பல்கள் மூழ்கடித்தன. அந்தக் கப்பலில் பல அமெரிக்கர்களும் இருந்தனர். கப்பல் மூழ்கியதால் 128 அமெரிக்கர்கள் இறந்தனர். இதன் காரணமாக ஜெர்மனியிடம் பகைமை பூண்டது அமெரிக்கா. பின்னர் தொடர்ந்து ஜெர்மனி அமெரிக்கக் கப்பல்களைத் தாக்கத் தொடங்கவே அது தன் நடுநிலைமை போக்கை மாற்றிக்கொண்டது.

ஜிம்மர்மேன் தந்தி (Zimmermann Telegram)
ஒரு தந்தியும் அமெரிக்கா தன் நிலையை மாற்றியதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. ஆர்தர் ஜிம்மர்மேன் என்பவர் ஜெர்மனியின் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தார். அவர் மெக்சிகோவுக்கு ஒரு தந்தியை அனுப்ப, அது மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. (அந்தத் தந்தி ஜிம்மர்மேன் தந்தி (Zimmermann Telegram) என்றே வரலாற்றில் குறிப்பிடப்படுகிறது). அதில் அமெரிக்கா தங்களுக்கு எதிராகப் போரிடத் தொடங்கினால் மெக்சிகோவுடன் ராணுவ ஒப்பந்தத்தை ஜெர்மனி செய்து கொள்ளத் தயங்காது இன்று இருந்தது.

தவிர டெக்சாஸ், நியூ மெக்ஸிகோ, அரிசோனா ஃபோன் பகுதிகள் மெக்ஸிகோவிடம் இருந்து அமெரிக்காவுக்கு அப்போது சென்று விட்டிருந்தன. இந்தப் பகுதிகளை மீண்டும் மெக்ஸிகோ தன்வசப்படுத்த வேண்டும் என்றும் அந்த தந்தி கூறியது. சங்கேத வார்த்தைகளில் அனுப்பப்பட்டிருந்த அந்த தந்தி பிரிட்டிஷ் உளவுத்துறையின் கைக்குச் சென்றுவிட்டது. அவர்களால் அந்த சங்கேத வார்த்தைகளை உடைத்து அதன் உண்மைத் தன்மையை உணர முடிந்தது. அதை அவர்கள் பகிரங்கமாக்கினார்கள். ஜெர்மனிக்கு எதிராக முதலாம் உலகப் போரில் அமெரிக்கா போரிட முனைந்ததற்கு இந்தத் தந்தியும் ஒரு முக்கிய காரணம். இந்த தந்தி வாசகங்கள் காரணமாக அமெரிக்க மக்களில் கணிசமானவர்கள் தங்கள் நாட்டின் பாதுகாப்புக்கு ஜெர்மனி ஒரு நேரடி ஆபத்து என்று கருதத் தொடங்கினார்கள். முதலாம் உலகப்போரில் அமெரிக்கா ஜெர்மனிக்கு எதிராகச் செயல்பட வேண்டும் என்ற கருத்து பரவத் தொடங்கியது.

இவற்றின் விளைவாக 1917 ஏப்ரல் 2 அன்று அமெரிக்க ஜனாதிபதி உட்ரோ வில்சன் தனது பாராளுமன்றத்தில் ஒரு உருக்கமான போர் உரையைப் படித்தார். தங்கள் நாடு ஜெர்மனி மீது போரை அறிவிக்க வேண்டும் என்றும், இது நாடு பிடிப்பதற்கான எண்ணமல்ல என்றும், ஜனநாயகம் மற்றும் அமைதிக்கான போர் இது என்றும் குறிப்பிட்டார். அடுத்த நான்கு நாLகளில் அமெரிக்கப் பாராளுமன்றம் ஜெர்மனி மீது போரை அறிவித்தது.
பாராளுமன்றத்தில் அமெரிக்க ஜனாதிபதி உட்ரோ வில்சனின் உரை

1917ல் நடைபெற்ற ரஷ்யப் புரட்சியும் அமெரிக்காவின் முடிவுக்கு ஒரு காரணமாக அமைந்தது. ரஷ்யாவில் ஜார் மன்னர்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது. இந்த நிலையில் ரஷ்யாவில் ஜெர்மானியர்கள் ஆதிக்கம் தலை எடுக்கலாம் என்றும் அப்படி நடைபெற்றால் ஐரோப்பாவில் தனது செல்வாக்குக் குறையும் என்றும் அது கணக்குப் போட்டது.

அமெரிக்காவின் முடிவுக்கு வணிகமும் ஒரு காரணம். முதலாம் உலகப் போர் தொடங்குவதற்கு முன்பாக நேச நாடுகளுக்கு (முக்கியமாகப் பிரிட்டனுக்கும் ஃப்ரான்ஸ்க்கும்) பல பொருள்களை ஏற்றுமதி செய்து வந்தது அமெரிக்கா. தவிர அந்த நாடுகளுக்கு பெரும் அளவில் கடனும் அளித்து வந்தது. இந்த நிலையில் முதலாம் உலகப்போரில் ஜெர்மனி அணி வென்றுவிட்டால் அது அமெரிக்க வணிகத்துக்கும் முதலீட்டுக்கும் பெருத்த அடியாக இருக்கும் என்ற நிலை உண்டானது. எனவே தனது பொருளாதாரக் கோணம் நலியாமல் இருப்பதற்காகவும், தாங்கள் ஏற்கெனவே அளித்த பெரும் கடன் தொகை தங்களுக்கு மீண்டு வர வேண்டும் என்பதற்காகவும் நேச நாடுகளுடன் அமெரிக்கா கூட்டுச் சேர்ந்தது.

- போர் மூளும்...


மேலும் படிக்க முதலாம் உலகப்போரின் அதிர்வுகள்: நடுநிலை என்று தீர்மானித்த அமெரிக்கா, பின்னர் போரில் பங்கேற்றது ஏன்?
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top