நாமக்கல்: `ஷவர்மா, கிரில் சிக்கன் விற்பனைக்கு தற்காலிக தடை!' - காரணம் இதுதான்!

0

நாமக்கல் ஏ.எஸ் பேட்டையைச் சேர்ந்தவர் தவக்குமார். இவருக்கு சுஜாதா என்ற மனைவியும், கலையரசி, பூபதி ஆகிய இரண்டு குழந்தைகளும் உள்ளனர். கடந்த 16-ம் தேதி இரவு சுஜாதா தன் மகள், மகன் மற்றும் அண்ணன் சினோஜ், அண்ணி கவிதா ஆகியோருடன் நாமக்கல் பரமத்தி சாலையிலுள்ள தனியார் ஹோட்டலுக்கு உணவு சாப்பிடச் சென்றுள்ளார். அங்கு ஷவர்மா உள்ளிட்ட இறைச்சி உணவு வகைகளை பார்சல் வாங்கிக்கொண்டு வீடு திரும்பியுள்ளனர். அந்த உணவை அனைவரும் வீட்டில் சாப்பிட்ட பின்னர் சிறிது நேரத்தில், கலையரசி உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, அவர் நாமக்கல்லிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

உயிரிழப்பு

அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று காலை அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மாணவியுடன் உணவு சாப்பிட்ட அவரின் தாய், மாமா, அத்தை அனைவரும் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இவர்கள் அந்த ஹோட்டலுக்கு உணவு வாங்கச் சென்ற அதே நாள் இரவு அந்த ஹோட்டலில் உணவு சாப்பிட்ட 13 மருத்துவக் கல்லூரி மாணவிகள், கர்ப்பிணி உள்ளிட்ட 43 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. அவர்களும் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர. இதையடுத்து, அந்த ஹோட்டலுக்குச் சென்ற மாவட்ட ஆட்சியர் உமா, அங்கு ஆய்வு செய்தார். தொடர்ந்து, அந்த ஹோட்டலுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில் சீல் வைக்கப்பட்டது.

மாவட்ட ஆட்சியர் உமா சோதனை

இதைத் தொடர்ந்து, ஹோட்டலிலுள்ள பொருள்கள் அனைத்தையும் அழிக்க கலெக்டர் உமா, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து ஹோட்டலிலுள்ள இறைச்சிகள் மற்றும் உணவுப் பொருள்கள் அழிக்கபட்டன. அந்த ஹோட்டலுக்கு இறைச்சி சப்ளை செய்த கடைகளிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். சிகிச்சை பெற்று வந்த மாணவி நேற்று உயிரிழந்த நிலையில், அந்த ஹோட்டல் உரிமையாளர் உட்பட 3 பேரை போலீஸார் கைதுசெய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து, நாமக்கல் மாவட்டத்தில் துரித உணவு வகைகளான ஷவர்மா, கிரில் சிக்கன் ஆகியவற்றை விற்பனை செய்ய தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை, மாவட்ட ஆட்சியர் உமா, மாவட்ட எஸ்.பி ராஜேஷ் கண்ணன், உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் அருண் ஆகியோர் கூட்டாக சேர்ந்து தெரிவித்தனர். துரித உணவு சாப்பிட்டதில் மாணவி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.


மேலும் படிக்க நாமக்கல்: `ஷவர்மா, கிரில் சிக்கன் விற்பனைக்கு தற்காலிக தடை!' - காரணம் இதுதான்!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top