”பாஜக-வை தூக்கி சுமப்பதே அதிமுக-வின் கடமையாக உள்ளது!” - சொல்கிறார் திருமாவளவன்

0

``அ.தி.மு.க, பா.ஜ.க-வை சுமக்காமல் தனித்து நின்றாலே, அவர்களுக்கு எந்த பாதிப்பும், பின்னடைவும் ஏற்படாது. பா.ஜ.க-வை சுமக்க, சுமக்க அ.தி.மு.க வாக்கு வங்கியை மேலும், மேலும் இழக்க நேரிடும்" என தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தொல்.திருமாவளவன்

தஞ்சாவூரில் அம்பேத்கர் கல்வி அறக்கட்டளைக்கான கட்டடத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ``மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான சட்ட மசோதாவை நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில், பா.ஜ.க அரசு அறிமுகப்படுத்தியது. அதை அனைத்து கட்சியினரும் ஒரு மனதாக ஆதரித்து நிறைவேற்றி இருக்கிறோம். ஆனால் இது உடனடியாக நடைமுறைக்கு வராத என்பது தான் கவலைக்குறியது.

மக்கள்தொகை கணகெடுப்பு, தொகுதி மறுவரையை முடித்து பின்னர் மகளிருக்கான இட ஒதுக்கீடு சட்டம் செயல்படுத்தப்படும் என்ற வரையறையுடன் இயற்றப்பட்டுள்ளது ஏமாற்றத்தை அளிக்கிறது. பா.ஜ.க-வினர் ஒவ்வொருவரையும் தனிப்பட்ட முறையில் இழிவாகப் பேசுவதையும், நாடாளுமன்ற அவையில் பிறரை பேசவிடாமல் தடுக்கும் வகையில் கூச்சலிடுவதையும் வாடிக்கையாக வைத்துள்ளனர். அ.தி.மு.க, பா.ஜ.க-வின் மோதல் தற்காலிகமான அரசியல் நாடகம். அவர்கள் கூட்டணியை ஒரு போதும் முறித்துக் கொள்ள மாட்டார்கள். அ.தி.மு.க-வை நம்பி பா.ஜ.க உள்ளது. பா.ஜ.க-வை நம்பி அ.தி.மு.க உள்ளது. இந்த இரண்டு கட்சிகளும் தணித்து தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு இல்லை.

தஞ்சாவூரில் தொல்.திருமாவளவன்

அண்ணாமலை கவனஈர்ப்புக்காக ஆதாரம் இல்லாத ஒன்றை பேசுகிறார். அண்ணாவை கொச்சைப்படுத்தும் விதமாக பேசுகிறார். இவை அனைத்தும் அரசியலில் தன்னை பற்றி ஒவ்வொரு நாளும் விவாதிக்க வேண்டும் என்ற உளவியல் சிக்கல் அண்ணாமலைக்கு இருக்கிறது. ஆகவே மனதில் பட்டதை எல்லாம் பேசுகிறார். வாய்க்கு வந்ததை எல்லாம் பேசிக்கொண்டு இருக்கிறார். அ.தி.மு.க-வில் ஜெயகுமார் போன்றவர்கள் தங்களின் கண்டனங்களை பதிவு செய்து இருக்கிறார்கள். இதனால், கூட்டணி முறிந்து விடும் என யாரும் எதிர்பார்க்க தேவையில்லை.

அ.தி.மு.க, பா.ஜ.க-வை சுமக்காமல் தனித்து நின்றாலே, அவர்களுக்கு எந்த பாதிப்பும், பின்னடைவும் ஏற்படாது. பா.ஜ.க-வை சுமக்க சுமக்க அ.தி.மு.க வாக்கு வங்கியை மேலும், மேலும் இழக்க நேரிடும். யார் சொன்னாலும் பா.ஜ.க-வை துாக்கி சுமப்பதே தங்களின் கடமை என அ.தி.மு.க-வினர் செயல்பட்டு கொண்டு இருக்கிறார்கள். எனவே, இந்த இடைக்கால மோதல், முரண்கள் தமிழக அரசியலிலும், கூட்டணியிலும் தாக்கத்தை ஏற்படுத்தாது.

தஞ்சாவூரில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன்

காவிரி மேலாண்மை வாரியம் ஆணையிட்டது போன்று காவிரியில் 5,000 கன அடி தண்ணீரை திறக்க வேண்டும் என மத்திய அமைச்சரிடம் கோரிக்கை வைத்தோம். எங்களின் கோரிக்கையில் இருந்த நியாயத்தை உணர்ந்துகொண்ட மத்திய அமைச்சர், காவிரி மேலாண்மை வாரிய தலைவருக்கு உத்தரவிட்டார். ஆனால் போதிய மழை இல்லாததால், தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு வழங்க முடியாது என வழக்கு போட்டது. அந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

கர்நாடகவில் காங்கிரஸ் அரசுக்கு எதிராக பா.ஜ.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். இதில் ஒன்றிய அரசு விரைந்து தலையிட வேண்டும், கர்நாடக மாநிலத்தில் உள்ள பா.ஜ.க ஒரு நிலைப்பாட்டை எடுக்கிறது. ஆனால் மத்தியில் உள்ள பா.ஜ.க அரசு தமிழகத்திற்கு எதிராக இல்லை என காட்டிக்கொள்கிறது. இந்த இரட்டை போக்கு பா.ஜ.க-விடம் வெளிப்படுவது அதிர்ச்சியளிக்கிறது.

எனவே, தமிழகத்திற்கு காவிரி மேலாண்மை வாரியம் வழிகாட்டியுள்ளதுபடி, 25 ஆயிரம் கன அடி தண்ணீர் தருவதற்கு ஒன்றிய அரசு அழுத்தத்தை தர வேண்டும். அகில இந்தியளவில், நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசு முன்வர வேண்டும்" என்றார்.


மேலும் படிக்க ”பாஜக-வை தூக்கி சுமப்பதே அதிமுக-வின் கடமையாக உள்ளது!” - சொல்கிறார் திருமாவளவன்
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top