Doctor Vikatan: வயிற்று உப்புசம், வாயு பிரிதல், பணியிடத்தில் தர்மசங்கடம்... தவிர்க்க வழிகள் உண்டா?

0

Doctor Vikatan: என் வயது 55. ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கிறேன். எனக்கு மதியநேரம் வரை வயிற்றுப் பிரச்னைகள் இருப்பதில்லை. மதியத்துக்கு மேல் வயிற்று உப்புசமும் வாயு பிரிவதும் அதிகமாக இருக்கிறது. இதனால் பணியிடத்திலும், வீட்டிலும் தர்மசங்கடத்தை உணர்கிறேன். இந்தப் பிரச்னைக்கு என்ன காரணம்.... தீர்வு உண்டா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த பொது மற்றும் தடுப்பு மருத்துவ நிபுணர் சுபாஷினி வெங்கடேஷ்.

பொது மற்றும் தடுப்பு மருத்துவ நிபுணர் சுபாஷினி வெங்கடேஷ்

வாயு பிரிவதுடன், வயிற்று உப்புசம், மேல் வயிற்றிலோ, கீழ் வயிற்றிலோ அதிகமான வலி, வயிற்றுப்போக்கு போன்றவை இருந்தாலோ, மலம் கழிப்பதில் சிரமம் இருந்தாலோ, மலத்துடன் ரத்தமும் சேர்ந்து வெளியேறினாலோ, மலத்தின் நிறம் வெளிறியதுபோல இருந்தாலோ, காரணமே இல்லாமல் திடீரென உடல் எடை குறைந்தாலோ, சாப்பிடவே தோன்றாத அளவுக்கு பசியின்மை இருந்தாலோ உடனடியாக நீங்கள் பொது மருத்துவரையோ, குடல், இரைப்பை சிகிச்சை மருத்துவரையோ அணுகி, ஆலோசனை பெறுவதுதான் சிறந்தது.

வாயு பிரிகிற மற்றும் வயிற்று உப்புச பிரச்னை உள்ளவர்கள் பால் மற்றும் பால் பொருள்களைத் தவிர்க்க வேண்டும். தயிர், மோர் சேர்த்துக் கொள்ளலாம். அதேபோல கோதுமை உணவுகளையும் சில நாள்களுக்கு நிறுத்தி, ஏதேனும் மாற்றம் தெரிகிறதா என்று பார்க்கலாம். நிறைய பேருக்கு கார்போஹைட்ரேட் அதிகமுள்ள உணவுகள் சாப்பிடுவதால் இந்தப் பிரச்னைகள் இருக்கலாம். அதிக உப்பு சேர்த்த உணவுகளாலும் பிரச்னை வரலாம்.

தயிர்

சிலர் நார்ச்சத்து நல்லது என்ற எண்ணத்தில் அளவுக்கதிகமான காய்கறிகள், பழங்கள் என சாப்பிடுவார்கள். அதுவும் தவறு. அதிக அளவிலான நார்ச்சத்தும் வயிற்றுப் பிரச்னைகளைத் தரலாம் என்பதால் அவற்றிலும் அளவோடு இருப்பதுதான் சரியானது. வெங்காயம், பூண்டு, மசாலா போன்றவற்றை அதிகம் சேர்த்த உணவுகளாலும் சிலருக்கு இந்தப் பிரச்னை வரலாம். சாப்பிடும்போது ஒவ்வொரு வாய் உணவையும் நன்கு மென்று, உமிழ்நீரோடு சேர்த்துச் சுவைத்து மெதுவாகவே விழுங்க வேண்டும்.

ஆனால் இன்று பலரும் வேகவேகமாகச் சாப்பிடுகிற பழக்கத்துக்கு ஆளாகியிருக்கிறார்கள். அப்படிச் சாப்பிடும்போது நம்மை அறியாமல் நிறைய காற்றையும் சேர்த்தே விழுங்குவோம். அதனாலும் வாயு பிரிவதும் வயிற்று உப்புசமும் ஏற்படலாம். பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்த்து நன்கு சமைத்த உணவுகளை மட்டும் சாப்பிடவும்.

ஆல்கஹால் அறவே தவிர்க்கப்பட வேண்டும். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். உடல்பருமன் காரணமாக வயிற்றுத் தசைகள் தளர்வாக இருந்தாலும் இந்தப் பிரச்னை வரலாம் என்பதால் வயிற்றுத்தசைகளை டைட்டாக்கும் பயிற்சிகளைச் செய்ய வேண்டும்.

உடற்பயிற்சி

50 வயதுக்குப் பிறகு இந்தப் பிரச்னைகள் இருந்தாலோ, உங்களுக்கு இதற்கு முன் அல்சர் போன்ற வயிறு தொடர்பான பிரச்னைகள் இருந்திருந்தாலோ மருத்துவரை அணுகி எண்டோஸ்கோப்பி சோதனை செய்து பார்க்கலாம். மிக அரிதாக வயிற்று உப்புசம் என்பது புற்றுநோயின் அறிகுறியாகவும் இருக்கலாம். எனவே வயிற்று உப்புசம் என்பது தொடர்கதையாக இருந்தால் தயவுசெய்து அலட்சியப்படுத்த வேண்டாம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


மேலும் படிக்க Doctor Vikatan: வயிற்று உப்புசம், வாயு பிரிதல், பணியிடத்தில் தர்மசங்கடம்... தவிர்க்க வழிகள் உண்டா?
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top