கனவு - 125 | `சில்லி ஜாம்... சில்லி ஆயில்' | சிவகங்கை - வளமும் வாய்ப்பும்!

0

சிவகங்கை மாவட்டத்தின் வளங்களில் ஒன்று மிளகாய். இதனை மதிப்புக்கூட்டல் செய்து சில்லி ஜாம் (Chilli Jam) தயாரிக்கலாம். மிளகாயில் Capsaicin (கெப்ஸைஸின்) எனும் காம்பவுண்டு (Compound) அடங்கியுள்ளதால், உடலிலுள்ள கெட்ட கொழுப்பினை குறைக்க உதவுகிறது. ஆகவே, உடல் எடை குறைப்பவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கலாம் என்பதால், அவர்களுடைய உணவு அட்டவணையில் சில்லி ஜாமை சேர்த்துக்கொள்ள டயட்டீஷியன்ஸ் பரிந்துரைக்கலாம்.

சில்லி ஜாம் தயாரிப்பு முறை எளிதானதே. மிளகாய், சர்க்கரை, எலுமிச்சை சாறு, உப்பு போன்றவற்றை தேவையான அளவுக்கு தண்ணீர் சேர்த்து கொள்கலனில் (Container) இட்டு, கொதிநிலைக்கு வரும்வரை சூடேற்றி, பின்னர் மிளகாய் நன்கு வேகும் வரை மிதமான வெப்பத்தில் சுமார் அரை மணி நேரத்துக்கு வைக்க வேண்டும். பிறகு, கலவையின் வெப்பம் குறைந்தவுடன் குறிப்பிட்ட அளவுகளில் கண்ணாடி ஜாடிகள், டப்பாக்கள், சாஷேக்கள் போன்றவற்றில் அடைத்து உருவாக்கலாம். ஒரு 100 கிராம் அளவுள்ள சில்லி ஜாம் தயாரிக்க மிளகாய் 80 கிராம், சர்க்கரை 10 கிராம், எலுமிச்சை 5 கிராம் உள்ளிட்டவற்றோடு தேவையான அளவுக்கு உப்பு சேர்த்துக்கொண்டு தயாரிக்க வேண்டும். சில்லி ஜாமை இனிப்பு மற்றும் காரம் என இரு சுவைகளிலும் தயாரிக்கலாம் என்பதால் இதற்கான தொழிற்சாலையை சிவகங்கை மாவட்டத்தில் அமைக்கலாம்.

சிவகங்கை மாவட்டத்தில் சுமார் 37,000 ஏக்கர் பரப்பளவில் மிளகாய் பயிரிடப்பட்டு, ஏக்கர் ஒன்றுக்கு ஏறக்குறைய 3.5 டன் வீதம் ஆண்டொன்றுக்கு தோராயமாக 1,30,000 டன் அளவுக்கு கிடைக்கும். இதிலிருந்து சுமார் 10 டன் மட்டும் எடுத்துக்கொண்டு சில்லி ஜாம் தயாரிக்கலாம். ஒரு கிலோ சில்லி ஜாம் உருவாக்க 800 கிராம் அளவுக்கு மிளகாய் தேவைப்படும் எனில், 10,000 கிலோவிலிருந்து ஏறக்குறைய 12,500 கிலோ அளவுக்கு ஜாம் கிடைக்கும். ஒரு 200 கிராம் அளவுடைய ஜாமை 400 ரூபாய் என விலை நிர்ணயம் செய்து, விற்பனை செய்தால் ஆண்டொன்றுக்கு சுமார் 2 கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் பெறலாம்.

மிளகாயிலிருந்து சில்லி ஜாம் தயாரிப்பதுபோல, சில்லி ஆயில் (Chilli Oi) எனப்படும் மிளகாய் எண்ணெய்யை உருவாக்கலாம். இதை, இறைச்சி, டிப்பிங் சாஸ் (Dipping Sauce), மரினேட் டிப் (Marinade Dip), ஸ்டிர் ஃப்ரைஸ் (Stir Fries), நூடுல்ஸ் போன்ற உணவுப் பொருள்களுக்குச் சுவையூட்டியாகப் பயன்படுத்தலாம். சில்லி ஆயில் தயாரிப்பு முறை எளிதானதுதான். மிளகாய்களைக் கழுவி, காம்பு மற்றும் விதைகளை நீக்கிய பின்னர், சூடேற்றப்பட்ட தாவர எண்ணெயுடன் சேர்த்து அதனை வேகவைக்க வேண்டும். பிறகு அந்த எண்ணெய்யை வடிகட்டி, பதப்படுத்துவதன் மூலம் மிளகாய் எண்ணெய்யைத் தயாரிக்கலாம்.

மிளகாய் எண்ணெய்யில் வைட்டமின் டி, ஏ, இ, கே உள்ளிட்ட சத்துகள் அடங்கியுள்ளன. இவை, ரத்தம் உறைதல், எலும்புகளின் ஆரோக்கியத்துக்குத் தேவையான பல்வேறு புரதங்களை உருவாக்கவும் உதவுகிறது. இதில் இரும்புச் சத்துக்களும் நிறைந்திருப்பதால், குளோசிடிஸ் (Glossitis) போன்ற நோய்களைத் தடுக்கவும் உதவுகிறது.

சந்தையில் மிளகாய் எண்ணெய்க்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்பதால், இதற்கான தொழிற்சாலையை சிவகங்கை மாவட்டத்தில் நிறுவலாம். இந்த மாவட்டத்தில் மிளகாய் உற்பத்தியாளர்கள் நலனுக்காக, மிளகாய் பதப்படுத்தும் பிரிவு தனியே இயங்கி வருகிறது. சீஸன் இல்லாத காலங்களில் இங்கிருந்து மிளகாயைக் கொள்முதல் செய்து, பயன்படுத்திக் கொள்ளலாம்.

சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை உள்ளிட்ட சுற்றுவட்டாரங்களில் மிளகாய் அதிக அளவில் விளைச்சலாகிறது. ஆண்டொன்றுக்கு சுமார் 1,30,000 டன் அளவுக்கு உற்பத்தியாகும் மிளகாயிலிருந்து ஏறக்குறைய 10 டன் (10,000 கிலோ) மட்டும் கொள்முதல் செய்து கொள்ளலாம். ஒரு லிட்டர் சில்லி ஆயில் தயாரிக்கத் தோராயமாக 125 கிராம் அளவுக்கு மிளகாய் தேவைப்படும். எனில் 10 டன்னிலிருந்து ஏறக்குறைய 80,000 லிட்டர் எண்ணெய்யை உற்பத்தி செய்யலாம். ஒரு லிட்டர் மிளகாய் எண்ணெய்யை சுமார் 1,500 ரூபாய் என விலை நிர்ணயம் செய்து, சந்தையில் விற்பனை செய்தால் ஆண்டொன்றுக்குத் தோராயமாக 12 கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் பெறலாம்.

(இன்னும் காண்போம்)


மேலும் படிக்க கனவு - 125 | `சில்லி ஜாம்... சில்லி ஆயில்' | சிவகங்கை - வளமும் வாய்ப்பும்!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top