A R Rahman: ரஹ்மான் மீது அளிக்கப்பட்ட புகார்; `ரூ.10 கோடி இழப்பீடு' கேட்கும் ஏ.ஆர்.ஆர் தரப்பு!

0

பிரபல திரைப்பட இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மீது இந்திய அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தினர், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி புகார் மனு ஒன்றை அளித்தனர். அதில், ``தேசிய அறுவை சிகிச்சை நிபுணர்கள் மாநாட்டை, சென்னையில் கடந்த 2018, டிசம்பர் 26 முதல் 30-ம் தேதிவரை நடத்த திட்டமிட்டோம். அதில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை நடத்துவதற்காக அவருக்கு முன்தொகையாக ரூ.29 லட்சத்து 50 ஆயிரம் கொடுத்தோம்.

ஏ.ஆர்.ரஹ்மான்

ஆனால், நிகழ்ச்சி நடத்த இடமும் அனுமதியும் தமிழக அரசிடமிருந்து கிடைக்கவில்லை. எனவே, முன்தொகையை திரும்பத் தரும்படி அவருக்கு கடிதம் அனுப்பினோம். ஏ.ஆர்.ரஹ்மான் அதற்கு ஒப்புக்கொண்டு, அந்த தொகைக்கான பின் தேதியிட்ட காசோலையை கொடுத்தார். ஆனால், சம்பந்தப்பட்ட வங்கிக் கணக்கில் பணம் இல்லையென காசோலை திரும்ப வந்துவிட்டது.

நாங்கள் கொடுத்த பணத்தைத் தரும்படி கடந்த 5 ஆண்டுகளாக ஏ.ஆர்.ரஹ்மானிடம் தொடர்ந்து கேட்டு வருகிறோம். ஆனால், இதுவரை எங்கள் பணம் திருப்பி தரப்படவில்லை. எனவே, ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் அவரது செயலாளர் செந்தில்வேலவன் ஆகியோர்மீது உரிய நடவடிக்கை எடுத்து, எங்களது பணத்தை திரும்பப் பெற்றுத்தர வேண்டும்" என்று புகார் மனுவில் கூறியிருந்தனர். மேலும், இது தொடர்பாக வழக்கறிஞர் ஷப்னம் பானு மூலமாக ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நோட்டீஸும் அனுப்பப்பட்டது.

இது தொடர்பாக, ஏ.ஆர்.ரஹ்மான் தரப்பில் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் நர்மதா சம்பத் பதில் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். அதில், ``இசைத்துறையில் பல்வேறு விருதுகளைப் பெற்று மதிப்புமிக்க நபராக உள்ள ஏ.ஆர்.ரஹ்மான், சமூகத்தில் பல தலங்களிலும் பல்வேறு நற்பணிகளை செய்துள்ளார். அவரை பற்றி ASICON 2018 நிகழ்ச்சி நடத்திய இந்திய அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தால் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டு, அவரது நற்பெயரை கெடுக்கும் வகையிலும், உண்மைக்கு புறம்பாகவும் உள்ளது.

ஏ.ஆர்.ரஹ்மான்

ASICON அமைப்புடன் ஏ.ஆர்.ரஹ்மான் எந்த விதத்திலும் தொடர்பிலோ, ஒப்பந்தத்திலோ இல்லாத நிலையில், மலிவான விளம்பரத்திற்காக இதுபோன்ற குற்றச்சாட்டை கூறி உள்ளார்கள்.
தனக்கு கொடுத்ததாகக் கூறப்படும் பணத்தை தான் பெறவில்லை என ரஹ்மான் கூறுகிறார். மூன்றாவது நபரிடம் பணத்தை கொடுத்துள்ள இந்திய அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கம், தேவையில்லாமல் ரஹ்மான் பெயரை இதில் ஈடுபடுத்தி உள்ளது. ரஹ்மானுக்கு அனுப்பிய நோட்டீஸை 3 நாள்களில் திரும்பப் பெற வேண்டும். பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதற்காக பொது மன்னிப்பு கேட்க வேண்டும்.  ஏ.ஆர்.ரஹ்மானுக்கு சமூகத்தில் உள்ள நற்பெயருக்கு ஏற்பட்ட பாதிப்பிற்கான இழப்பீடாக 10 கோடி ரூபாயை தர வேண்டும். தவறினால் சட்டரீதியாக உரிமையியல் மற்றும் குற்றவியல் நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும்" என்று வழக்கறிஞர் நர்மதா சம்பத் அனுப்பியுள்ள நோட்டீஸில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk


மேலும் படிக்க A R Rahman: ரஹ்மான் மீது அளிக்கப்பட்ட புகார்; `ரூ.10 கோடி இழப்பீடு' கேட்கும் ஏ.ஆர்.ஆர் தரப்பு!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top