ஒன் பை டூ: `துணிச்சலைப் பற்றி எதிர்க்கட்சித் தலைவர் சொல்ல வேண்டாம்' என்ற முதல்வரின் விமர்சனம்?

0

பழ.செல்வகுமார், மாநிலத் துணைச் செயலாளர், சுற்றுச்சூழல் அணி, தி.மு.க

‘‘துணிச்சல் குறித்துப் பேச அ.தி.மு.க-வுக்கு என்ன அருகதை இருக்கிறது... இதே எடப்பாடி பழனிசாமி, தான் முதல்வராக இருந்தபோது ‘சி.ஏ.ஏ சட்டத்தால் எந்தச் சிறுபான்மையினருக்குப் பாதிப்பு இருக்கிறது?’ என்று கேள்வி எழுப்பினார். ஆனால், இப்போது ‘கூட்டணி தர்மத்துக்கு உட்பட்டு ஆதரித்தோம்’ என்கிறார். விவசாயிகளின் உயிரை உறிஞ்சும் வேளாண் மசோதாவுக்கும் ஆதரவு தெரிவித்துவிட்டு, ‘அமித் ஷாவுக்காக மசோதாவுக்கு ஆதரவு தெரிவிக்கிறோம்’ என்று நாடாளுமன்றத்திலேயே சொன்ன அடிமைக் கூட்டம்தானே அ.தி.மு.க... ‘பா.ஜ.க-வுடன் இனி கூட்டணி கிடையவே கிடையாது’ என்று ஜெயலலிதா சொன்னதையும் மீறி பா.ஜ.க-வுடன் இத்தனை காலம் உறவாடி, அவர்களது அலுவலக வாசலிலேயே கிடையாய்க் கிடந்தார்கள். கூட்டணியைவிட்டு வெளியேறிய பிறகும்கூட இனியாவது ஒன்றிய பா.ஜ.க அரசின் கொடும் செயல்களை எதிர்த்து பேசும் துணிவும் திராணியும் எடப்பாடிக்கு இருக்கிறதா... ஆக, அவர்களது இந்த துணிச்சலைத் தெரிந்துதான் மக்கள் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வையே தூக்கி எறிந்தார்கள். அடுத்து நாடாளுமன்றத் தேர்தலிலும் அவர்களைத் துடைத்து எறியப்போவதைப் பார்க்கத்தான் போகிறோம்.’’

பழ.செல்வகுமார், பாபு முருகவேல்

பாபு முருகவேல், செய்தித் தொடர்பாளர், அ.தி.மு.க

``எடப்பாடியாரின் துணிச்சல் குறித்துப் பேச ஸ்டாலினுக்கு மட்டுமல்ல... ஒட்டுமொத்த தி.மு.க-வுக்குமே கடுகளவு அருகதைகூட கிடையாது.

அ.தி.மு.க துணிச்சலால் பிறந்த இயக்கம். மத்திய பா.ஜ.க அரசு, ஹைட்ரோகார்பன் திட்டத்தை மீண்டும் உயிர்ப்பிக்க நினைத்தபோது அதை எதிர்த்துப் பேசியதுடன், டெல்டா பகுதியைப் பாதுகாக்கப்பட்ட மண்டலமாக மாற்றி நடவடிக்கை எடுத்தது அ.தி.மு.க. ஆனால், சட்டமன்றத்தில் காவிரி விவகாரம் குறித்து தி.மு.க கொண்டுவந்த தனித் தீர்மானத்தில், தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசை ஒரு வார்த்தைகூட கண்டிக்கவில்லை. கூட்டணியிலுள்ள கட்சியை எதிர்க்கத் துணிவில்லாமல் வெறும் கண்துடைப்புக்காகத் தீர்மானத்தைக் கொண்டுவந்திருக்கிறது தி.மு.க. ஆனால், காவிரி விவகாரம் தொடர்பாக 22 நாள்கள் நாடாளுமன்றத்தையே முடக்கிய வரலாறு அ.தி.மு.க-வுக்கு உண்டு. கடந்தகாலத்தில், சுயநலத்துக்காக மத்திய பா.ஜ.க அரசில் கூட்டணி வைத்துக்கொண்ட கட்சி தி.மு.க. ஆனால், மக்கள் நலனுக்காக பா.ஜ.க கூட்டணியிலிருந்து வெளியேறி, ஆட்சியையே கலைத்த கட்சி அ.தி.மு.க. எனவே, துணிச்சல் பற்றி எங்களுக்கு வகுப்பெடுக்க தி.மு.க-வுக்கு எந்தத் தகுதியும் கிடையாது!


மேலும் படிக்க ஒன் பை டூ: `துணிச்சலைப் பற்றி எதிர்க்கட்சித் தலைவர் சொல்ல வேண்டாம்' என்ற முதல்வரின் விமர்சனம்?
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top