விருதுநகர்: வழக்கறிஞர் போர்வையில், புகையிலைப் பொருள்கள் கடத்தல் - இருவர் கைது!

0

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் - மதுரை சாலையில் தனியார் பள்ளி அருகே உள்ள காவல் சோதனை சாவடியில் காவல்துறையினர் நேற்று வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தனர். அப்போது வழக்கறிஞர் ஸ்டிக்கர் ஒட்டிய சொகுசு கார் ஒன்று அவ்வழியாக வேகமாக வந்ததாக கூறப்படுகிறது. காரை நிறுத்துமாறு‌ போலீஸார் சைகை காண்பித்தும், காரை நிறுத்தாமல் காவலரை இடித்து தள்ளிவிட்டு சோதனை சாவடியை கடந்து கார் வேகமாக சென்றுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த போலீஸார் அந்த காரை துரத்திச்சென்று மடக்கி பிடித்தனர்.

பறிமுதல்

தொடர்ந்து, காருக்குள் சோதனை செய்தபோது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் மூட்டை, மூட்டையாக இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து, காரில் வந்தவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள், அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த முகம்மது அப்துல் சலீம், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சைத்தன் சிங் ஆகியோர் என்பது தெரியவந்தது. இவர்கள் இருவரும், உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த அஜித் சிங் என்பவரிடமிருந்து தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை பெற்றுக்கொண்டு சேலத்தில் இருந்து தென்காசி மாவட்டத்தில் கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதற்காக கடத்திவந்தது தெரியவந்தது. மேலும், சோதனைச்சாவடி மற்றும் வாகனச் சோதனையில் இருந்து தப்பிப்பதற்காக காரின் முன்பக்க கண்ணாடியில் வழக்கறிஞர்கள் பயன்படுத்தும் 'ஸ்டிக்கர்' ஒட்டி கடத்தலில் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கடத்தலுக்கு பயன்படுத்திய கார் மற்றும் 60 மூட்டைகளில் இருந்த ரூ.12 லட்சம் சந்தை மதிப்புள்ள 610 கிலோ புகையிலைப் பொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இதனையடுத்து, முகம்மது அப்துல் சலீம், சைத்தன் சிங் ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவுசெய்த போலீஸார், அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.


மேலும் படிக்க விருதுநகர்: வழக்கறிஞர் போர்வையில், புகையிலைப் பொருள்கள் கடத்தல் - இருவர் கைது!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top