கழுத்தை நெரிக்கும் கடனுக்கு தீர்வு... நம் கைகளில்தான்!

0

தனிமனிதர்களின் பொருளாதார நிலை குறித்து சமீப காலமாக வரும் சில புள்ளிவிவரங்கள் நம்மை அதிர்ச்சி அடையச் செய்வதாகவே இருக்கின்றன. சில நாள்களுக்குமுன் ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் வெளியிட்ட, தனிநபர்கள் வாங்கிய கடன் குறித்த புள்ளிவிவரங்கள் அப்படிப்பட்டவைதான்.

கடந்த ஓராண்டுக் காலத்தில் பர்சனல் லோன்கள் 30.7% அதிகரித்துள்ளன. அதாவது, கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பர்சனல் கடன்களின் மதிப்பு 36.47 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இது இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், 47.70 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. அது மட்டுமல்ல, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் கிரெடிட் கார்டு கடன்களின் மதிப்பு சுமார் 1.68 லட்சம் கோடி ரூபாய். இதுவே கடந்த ஆகஸ்ட் 25-ம் தேதி நிலவரப்படி, இந்தியாவில் கிரெடிட் கார்டு கடன்களின் மதிப்பு சுமார் 2.18 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது வரலாறு காணாத உச்சம் ஆகும்.

நம் நாட்டில் ஒருபக்கம் பொருளாதாரம் நன்கு வளர்ச்சி அடைந்து, தனிமனிதர் களின் வருமானம் குறிப்பிடத்தகுந்த அளவு அதிகரித்துவரும் வேளையில், இன்னொரு பக்கம், மக்கள் வாங்கும் கடன்களின் அளவும் அதிகரித்துவருவது எந்த வகையிலும் ஆரோக்கியமான வளர்ச்சியாக நாம் பார்க்க முடியாது.

முன்பெல்லாம் வருமானம் எந்த அளவில் இருந்ததோ, அந்த அளவிலேயே செலவுகளை வைத்துக்கொண்டார்கள் நமக்கு முன்பிருந்தவர்கள். வருமானம் குறைவாக இருந்தாலும், அதில் கொஞ்சம் பணத்தையாவது மிச்சம் பிடித்து சேமிக்க நினைத்து, சிக்கனமான வாழ்க்கையை வாழ்ந்தார்கள். ஆனால், இன்றைக்குக் கடன் வாங்கி வாழ்க்கை நடத்துவது சமூகத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு வாழ்க்கை முறையாக மாறியிருப்பதுடன், அப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்வதில் எந்தத் தவறும் இல்லை என்று நினைக்கும் அளவுக்கு மக்கள் மாறியிருக்கிறார்கள். திருமணத்தை நடத்த கடன், வாகனம் வாங்க கடன், வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்க கடன் என அத்தனை விஷயங் களையும் கடன் வாங்கியே சமாளிக்கும் நிலைக்கு இன்றைக்குப் பலரும் வந்து விட்டார்கள் என்பதை வேதனையுடன் ஒப்புக்கொள்ள வேண்டியிருக்கிறது.

பார்த்ததை எல்லாம் அனுபவிக்க வேண்டும் என்கிற ஆசையும், வட்டியாகக் கட்டும் பணம் பற்றி எந்த அக்கறையும் இல்லாததும்தான் இந்த மோசமான நிலைக்கு முக்கியமான காரணம். ‘தனிமனிதர்கள் நாசமானாலும் பரவாயில்லை; அவர்களிடம் இருந்து கிடைக்கும் வட்டிதான் நமக்கு முக்கியம்’ என்று நினைக்கும் கந்துவட்டி நிறுவனங்களின் பேராசையும் மக்களை இந்தக் கடன் புதைகுழியில் மாட்டவைத்து சீரழித்துக்கொண்டிருக்கின்றன!

கழுத்தை நெரிக்கும் இந்தக் கடன் சுமையில் இருந்து மீள்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதைவிட, நம் வரவு-செலவு கணக்கை சரியாக அமைத்துக்கொள்வதன்மூலம், கடன் இல்லாத ஒரு வாழ்க்கையை நம்மால் நிச்சயமாக வாழ முடியும். நிதி நிர்வாகத்தை சரியாகப் புரிந்துகொண்டு நம் செலவுகளை சரியாக அமைத்துக்கொண்டால், கடன் என்கிற பிரச்னை நம்மில் யாருக்கும் வராது என்பது நிச்சயம்!

- ஆசிரியர்


மேலும் படிக்க கழுத்தை நெரிக்கும் கடனுக்கு தீர்வு... நம் கைகளில்தான்!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top