விதிகளை மீறி வாரிசு, துணிவு அதிகாலை காட்சிகள் - ரோகினி திரையரங்கு வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி!

0

தமிழ்நாடு சினிமா விதிகளில், திரையரங்குகள் ஒரு நாளைக்கு நான்கு காட்சிகள் மட்டுமே திரையிட வேண்டும் எனவும், பண்டிகை நாட்களில் ஒரு காட்சி கூடுதலாக திரையிட்டுக் கொள்ளலாம் எனவும், விதியை மீறும் பட்சத்தில் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை ஒட்டி நடிகர் விஜய் நடித்த வாரிசு திரைப்படமும், நடிகர் அஜித் நடித்த துணிவு படமும் வெளியாகின. படங்கள் வெளியான கடந்த ஜனவரி 11-ம் தேதி முதல், அதிகாலை 5 மணி காட்சிகள் திரையிடப்பட்டதாக கூறி, சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்குக்கு ஒரு காட்சிக்கு 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து  சென்னை மாநகர காவல் ஆணையர் கடந்த மார்ச் 31ம் தேதி உத்தரவிட்டார். இதே போன்று பத்து தல படத்தின் 4 அதிகாலை காட்சிகளுக்காக  4 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அந்த வகையில் மொத்தம் 24 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. 

திரையரங்கம்

அபராத தொகை செலுத்தப்பட்ட நிலையில், காவல் ஆணையரின் உத்தரவை எதிர்த்து ரோகினி திரையரங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ஏற்கனவே ஓ.டி.டி. போன்றவற்றால் திரையரங்குகள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ள நிலையில், அரசின் கட்டுப்பாடுகள் இழப்பை ஏற்படுத்துவதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதி சேஷசாயி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது திரையரங்கம் சார்பில், தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தின்படி 24 மணி நேரமும் திரையரங்குகளை திறக்கலாம் என தமிழக அரசின் ஆணை உள்ளது. திரையரங்கம் தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தின்படி நிறுவனங்கள் என்கிற வரையறைக்குள் வருகிறது. எனவே, 24 மணி நேரமும் திரைப்படங்கள் திரையிடலாம் என்றும்,  எனவே காவல்துறை ஆணையரின் அபராதம் விதித்த உத்திரவை ரத்து செய்ய வேண்டுமெனவும் வாதிடப்பட்டது.

இதற்கு பதிலளித்த தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, "தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம் பணியாற்றுபவர்களின் பணி வரைமுறைகளுக்காக மட்டுமே தவிர, திரைப்படங்கள் திரையிடுவதற்கு அல்ல. திரையிடுவது குறித்து தமிழ்நாடு சினிமா முறைப்படுத்துதல் சட்டம் மற்றும் விதிகள்தான் பொருந்தும். 24 மணி நேரமும் திறக்கலாம் என்பதற்காக, தணிக்கை செய்யப்படாத திரைப்படங்களை திரையிட்டால் எவ்வாறு மத்திய அரசின் ஒளிப்பதிவு சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கலாமோ... அதே போன்று தமிழ்நாடு சினிமா முறைப்படுத்துதல் சட்ட விதிகளுக்கு முரணாக கூடுதல் காட்சிகள் திரையிட்டால் நடவடிக்கை எடுக்க காவல்துறை ஆணையருக்கு அதிகாரம் உள்ளது" என வாதிட்டார்.

திரையரங்கு

மேலும். "சட்ட ஒழுங்கை பாதுகாக்க வேண்டியதும், பொது ஒழுங்கை நிலைநிறுத்துவதும் காவல்துறை ஆணையரின் கடமை. இப்படி விதிகளை மீறி ரோகினி திரையரங்கம் அதிகாலையில் கூடுதல் காட்சிகள் திரையிட்டதால் ஒருவர் மரணித்த நிகழ்வும் நடந்திருக்கிறது. தமிழ்நாடு சினிமா திரைப்பட சங்கத்தின் பொதுச் செயலாளரான இவ்வழக்கை தாக்கல் செய்தவர்தான், கூடுதல் காட்சிகள் திரையிட அனுமதி கேட்டும் மனு கொடுத்துள்ளார். கூடுதல் காட்சிகள் திரையிட தமிழ்நாடு சினிமா முறைப்படுத்துதல் சட்டத்தின் கீழ் மனு கொடுத்துவிட்டு தற்போது தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் 24 மணி நேரமும் திரைப்படங்கள் திரையிடலாம் என முரண்பாடாக மனுதாரர்கள் கூறுகின்றனர்" என்றும் அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.

இதனை ஏற்றுகொண்ட நீதிபதி சேஷசாயி, தலைமை குற்றவியல் வழக்கறிஞர் திரு. அசன் முகமது ஜின்னா அவர்கள் கூறியதன்படி திரைப்படங்களை திரையிடுவதற்கு தமிழ்நாடு சினிமா முறைப்படுத்துதல் சட்டம்தான் பொருந்தும் என்றும் தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம் பொருந்தாது என்றும், காவல்துறை ஆணையாளர் அபராதம் விதித்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய முடியாது என்றும் கூறி தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk


மேலும் படிக்க விதிகளை மீறி வாரிசு, துணிவு அதிகாலை காட்சிகள் - ரோகினி திரையரங்கு வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top