கனவு -134 | ப்ளோரல் ஃபேஸ் டிப்ஸ் டு உள்ளாடைகளுக்கான புதிய பிராண்ட் | திருப்பூர் - வளமும் வாய்ப்பும்

0

திருப்பூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா அமையும் இடத்துக்கு அருகிலேயே ஆண்கள், பெண்களுக்கான உள்ளாடைகளை, சர்வதேச தரத்தில் உருவாக்கி, உலக அளவில் விற்பனை செய்யும் வகையிலான புதிய பிராண்ட் ஒன்றை உருவாக்கலாம்.

திருப்பூரில் உள்ளாடை உற்பத்தியில் பல நிறுவனங்கள் ஈடுபட்டாலும், அந்தப் பிராண்டுகள் உலக அளவிலான வரவேற்பைப் பெறும் வகையில் பிராண்ட் செய்யப்படவில்லை. பெரும்பாலும் அவை, உள்ளூர் அளவிலேயே உள்ளன, அதிலும் சில பிராண்ட்கள் மட்டுமே பிரபலமானவை. சந்தையில், ஜாக்கி (Jockey), கேன்ஸ் (Hanes) உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்களின் பிராண்டுகளின் உள்ளாடைகளே பிரபலமாக இருக்கின்றன. இந்த பன்னாட்டு நிறுவன பிராண்டுகளின் தயாரிப்புகளும், பெரும்பாலும் திருப்பூரில்தான் உற்பத்தியாகின்றன. அந்த பிராண்டட் ஆடைகளின் தலைமை நிறுவனங்கள் மட்டுமே அவர்களின் சொந்த நாடுகளில் இயங்குகின்றன. அவற்றின் விற்பனை நிலையங்களும் கிளைகளும் உலகம் முழுவதும் நிரம்பியிருக்கின்றன.

குறிப்பாக, ஜாக்கி நிறுவனம் மட்டுமே உள்ளாடை உற்பத்தியில் சுமார் 50,000 கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் ஈட்டுகிறது. சந்தையில் அதன் உள்ளாடைகள் தோராயமாக 200 ரூபாயில் தொடங்கி 300 ரூபாய் வரை விற்பனையாகின்றன. தன்னுடைய ஆடைகளைத் தயாரிக்கும் பணியினை திருப்பூர், ஒசூர் உள்ளிட்ட மாவட்டங்களிலுள்ள ஆடைத் தயாரிப்பு நிறுவனங்களுக்கு வழங்குகின்றன.

ஜாக்கி, கேன்ஸ் நிறுவன பிராண்டுகளின் உள்ளாடைகளை வெட்டி, ஒட்டி, தைத்து அதில் அவர்களுடைய பிராண்ட் லோகோவினைப் பேஸ்ட் செய்யும் பணிகளை, அதாவது சேவை வழங்குவோராக (Service Provider) மட்டுமே ஆடை தயாரிப்பு நிறுவனங்கள் ஈடுபடுவதால் அவற்றுக்குப் போதிய வருமானம் கிடைப்பதில்லை.

ஜாக்கி உள்ளிட்ட நிறுவனத்திடமே பிராண்டட் சார்ந்த உரிமங்கள் (குறிப்பாக, நிறுவனத்தின் புராடக்ட் (Product), ஐபி என அழைக்கப்படும் இன்டலெக்சுவல் புராப்பர்டி (Intellectual property) உள்ளிட்டவை ) அனைத்தும் அந்நிறுவனத்தின் வசம் மட்டுமே உள்ளன என்பதால், ஒரு உள்ளாடையை சேவை அடிப்படையில் தயாரிக்கும் ஒரு தயாரிப்பு நிறுவனத்துக்கு குறைந்தபட்சமாக, சுமார் 20 ரூபாயிலிருந்து 30 ரூபாய் வரை மட்டுமே ஒரு உள்ளாடை தயாரிப்பிலிருந்து வருமானமாகப் பெற முடிகிறது.

உள்ளாடையின் விற்பனை விலையில் 10 சதவிகிதம் அளவுக்குக் கூட அதனைத் தயாரித்து அளிக்கும் சேவை வழங்கும் நிறுவனத்துக்குக் கிடைப்பதில்லை. சுமார் 90 சதவிகித வால்யூ கிரியேஷன் (Value Creation) முழுக்க பிராண்டுகளின் உரிமையாளர்களுக்கே சென்றடைகிறது.

எனவே உள்ளாடை உற்பத்தியில், 100 சதவிகித வருமானத்தை நாம் பெற வேண்டுமானால், உலக அளவில் பிரபலம் அடையக்கூடிய வகையிலான புதிய பிராண்டை நாம் உருவாக்க வேண்டும். புதிய பிராண்டட் ஆடைகளில் ஆண்கள், பெண்கள், குழந்தைகளுக்கு ஏற்ற பல்வேறு டிசைன்கள், அளவுகளில் தயாரிப்பதோடு, அவற்றைச் சந்தையில் விளம்பரத்தி, பிரபலப்படுத்த வேண்டும்.

திருப்பூர் மாவட்டத்தில் மதிப்புக்கூட்டப்பட்ட பனியன் ஆடைகளைத் தயாரிக்கும் சுமார் 150-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இருக்கின்றன. அவற்றிலிருந்து ஆடைகளைக் கொள்முதல் செய்து கொள்ளலாம். இன்றைய சூழலில் நுகர்வோர் மத்தியில் பிராண்டட் ஆடைகளுக்கே வரவேற்பு கிடைக்கிறது என்பதால் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சர்வதேச அளவிலான புதிய பிராண்டுகளுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்து, விற்பனை மேம்படும். இதன் வழியே ஆண்டொன்றுக்கு பல கோடி ரூபாய் வருமான வாய்ப்பை பெறலாம்.

திருப்பூர் மாவட்டத்தின் வளங்களில் ஒன்றான சம்பங்கிப் பூவை மதிப்புக்கூட்டல் செய்வதன் வழியாக முகம், சருமத்தைப் பாதுகாக்கும் வகையிலான ப்ளோரல் ஃபேஸ் டிப்ஸ் (Floral Face Dips) எனும் புராடக்டைத் தயாரிக்கலாம்.

சம்பங்கி பூவுக்குச் சில மருத்துவ குணங்கள் உள்ளன . குறிப்பாக, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்பு (Anti Inflammatory) ஆகியவற்றைக் கொண்டிருப்பதால் சருமத்திலுள்ள அழுக்கு, பிசுபிசுப்பு போன்றவற்றை நீக்கி, சுத்தமாக்கும். மேலும் சருமத்தை மென்மையாக்கி, ஈரப்பதத்தை தக்கவைக்கவும் உதவும். கூடுதலாக, இறந்த செல்களை நீக்கி, தோற்றப் பொலிவை மேம்படுத்தும். இதிலிலுள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட்டுகள் சருமத்தை ஃப்ரீ ரேடிக்கல் சேதத்திலிருந்து (Free radical damage) பாதுகாத்து, முகப்பொலிவைக் கூட்ட உதவும்.

சம்பங்கி பூவிலுள்ள, பிஎச் (6.5 pH - 6.9 pH) அளவு சமநிலையில் உள்ளதால் சருமத்தில் எரிச்சலை ஏற்படுத்தாது. ஒரு பொருளிலுள்ள அமிலத்தன்மையை குறிப்பிடப் பயன்படுத்தும் பிஎச் (pH - potential of Hydrogen ) அளவுகோலானது அந்தப் பொருளிலுள்ள ஹைட்ரஜன் செறிவைக் கணக்கிடப் பயன்படுகிறது.

pH 7 என்பது பொருளில் அமிலத்தன்மை இல்லை, pH 7க்கு மேல் இருந்தால் காரத்தன்மை அதிகரிக்கத் தொடங்கும். pH 14 அதிகபட்ச காரத்தன்மை. இப்படியாகத்தான் அளவிடப்படும். pH 7 லிருந்து குறைந்துகொண்டே அதாவது, pH 6.5 தொடங்கி pH 6.4, pH 6.3, pH 6.2 இருந்து pH 1 வரை அமிலத்தன்மையானது அதிகரித்து காணப்படும்.

pH 1 என்பது அதிகபட்ச அமிலத்தன்மை. இங்கே, 6.5 பிஎச் அளவானது பாதுகாப்பானது. உதாரணத்துக்கு, நாம் அருந்தும் குடிநீரின் ஹைட்ரஜன் அளவும் இதுதான். ஆகவே, சென்ஸிசிட்டிவ்வான சரும உள்ளவர்களும் பயன்படுத்தலாம். சந்தையில் விற்கப்படும் பேஸ் டிப்கள் pH 4.5 ல் தொடங்கி pH 10 வரை உள்ளது. இவற்றைச் சருமத்தில் பயன்படுத்தும்போது அதன் ஈரப்பதத்தை குறைத்துவிடும் அபாயமிருக்கிறது. pH 7க்கு மேல் இருந்தால் சருமம் வறண்டு விடுவதோடு, செல்களின் அழிவுக்கும் காரணமாகலாம். ஆனால், ப்ளோரல் ஃபேஸ் டிப்ஸில் pH 6.5 உள்ளதால் சருமத்துக்கு பாதுகாப்பானது. மேலும், இது சம்பங்கி பூவிலிருந்து உருவாக்கப்படும் ஃபேஸ் டிப்ஸ் என்பதால் பெரும்பாலான வாடிக்கையாளர்களை ஈர்க்கலாம்.

சம்பங்கி பூவிலிருந்து சாறு எடுத்து, அதனுடன் சர்ஃபாக்டன்ஸ் (surfactants) அதாவது சோப் ஆயிலைச் சேர்த்து ப்ளோரல் ஃபேஸ் டிப்ஸ் தயாரிக்க வேண்டும். அவ்வாறு தயாரிக்கப்பட்ட ஃபேஸ் டிப்ஸை தண்ணீரில் சில துளிகள் கலந்து, காட்டன் துணியைப் பயன்படுத்தி, முகத்தில் தடவி, 30 விநாடிகள் மெதுவாக மசாஜ் செய்து, பின்னர் வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவினால் முகம் பொலிவுறும்.

திருப்பூர் மாவட்டத்தில் அவிநாசி, பெருமாநல்லூர், அருள்புரம், தோட்டம்பாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டாரங்களில் ரோஜா, மல்லி, சாமந்தி, லாவெண்டர், சம்பங்கி உள்ளிட்டவை விளைச்சலாகின்றன. இதில், சம்பங்கி மட்டும் 1,200 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டு, ஏக்கர் ஒன்றுக்கு சுமார் 12 டன் வீதம், ஆண்டொன்றுக்கு ஏறக்குறைய 14,400 டன் அளவுக்கு விளைச்சல் கிடைக்கிறது. இதிலிருந்து சுமார் 100 டன் மட்டும் எடுத்துக்கொண்டு, ப்ளோரல் ஃபேஸ் டிப்ஸை உற்பத்தி செய்யலாம்.

ஒரு கிலோ சம்பங்கியிலிருந்து 500 மில்லி லிட்டர் சாறு வீதம் 100 டன்னிலிருந்து ஏறக்குறைய 50,000 லிட்டர் கிடைக்கும். 30 மில்லி லிட்டர் கொண்ட ஒரு ஃபேஸ் டிப்ஸ் தயாரிக்க 30 மில்லி லிட்டர் (ஒரு சதவிகிதம் சோப் ஆயில் கலந்தது) ஃபேஸ் டிப்ஸ் தயாரிக்க முடியும் எனில், 50,000 லிட்டரிலிருந்து 16 லட்சம் பாட்டில்களை உற்பத்தி செய்து, ஒரு பாட்டிலின் விலையை 250 ரூபாய் என விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்தால், ஆண்டொன்றுக்கு தோராயமாக 40 கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் ஈட்டி, வளம் பெறலாம்.

(இன்னும் காண்போம்)

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk


மேலும் படிக்க கனவு -134 | ப்ளோரல் ஃபேஸ் டிப்ஸ் டு உள்ளாடைகளுக்கான புதிய பிராண்ட் | திருப்பூர் - வளமும் வாய்ப்பும்
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top