``சாதிய வன்கொடுமைகள் ஆட்சியைப் பொறுத்து நடப்பதல்ல..!” - சொல்கிறார் திருமாவளவன்

0

``தி.மு.க ஆட்சியில் சாதிய வன்முறைகள் அதிகரித்த வண்ணம் இருக்கிறதே?”

திருமாவளவன் - ஸ்டாலின்

``சாதிய வன்கொடுமைகள் ஆட்சியைப் பொறுத்து நடப்பதல்ல, தி.மு.க அரசும் சாதி பேதங்களுக்கு ஆதரவானது கிடையாது. ஆனால் சமூக யதார்த்தத்தில் இன்னும் இது போன்ற நிலை தொடர்கிறது. அது வருத்தத்துக்குரியது. இவற்றைத் தீவிரமான நடவடிக்கைகள் மூலமாகக் கட்டுபடுத்த முடியும். வி.சி.க-வைப் பொறுத்தவரை விசாரணை என்கிற பெயரில் எங்காவது குற்றவாளியைக் கைதுசெய்வதில் காலதாமதம் செய்யப்பட்டால், உடனடியாக அமைச்சரின் கவனத்துக்கும், முதலமைச்சரின் கவனத்துக்கும் கொண்டு செல்கிறோம். சம்பவங்களைக் கண்டித்து ஆர்ப்பாட்டமும் நடத்திக் கொண்டுதான் இருக்கிறோம்.”

திருமாவளவன்

`` `மாநில உரிமைகளைவிட தேசிய அரசியலை மையப்படுத்தும் தேசியக் கட்சிகள் தமிழ்நாட்டுக்குத் தேவையில்லை' என்ற வாதம் சமீபகாலமாக முன்வைக்கப்படுகிறதே?”

``நம் கருத்தாகச் சொல்வதைவிட, மக்களே தேசியக் கட்சிகளை ஏற்பதா இல்லையா என்பதை முடிவு செய்கிறார்கள். 40 ஆண்டுகளுக்கு முன்பு நாடாளுமன்றத் தேர்தல் என்றால், காங்கிரஸ்தான் தலைமை வகிக்கும். தி.மு.க-வோ, அ.தி.மு.க-வோ ஓர் அங்கமாக இருக்கும். இந்தியா முழுக்க அப்படித்தான் தேசியக் கட்சிகள் தலைமை தாங்கின. ஆனால், இன்று இந்தியா முழுக்க மாநிலக் கட்சிகள்தான் ஆதிக்கம் செய்கின்றன. இது தன்னியல்பாக மக்கள் உணர்ந்துகொண்ட ஒன்றே தவிர, யாரும் கற்பித்த ஒன்றல்ல."

``மாநிலக் கட்சிகள் வலிமை பெறுவதை ஆரோக்கியமான போக்காகக் கருதுகிறீர்களா?”

``இது மக்கள் தேவையிலிருந்து உருவாவது. அரோக்கியமானதா, ஆரோக்கியமில்லாததா என்பதைவிட மாநில உணர்வுகள், மாநில உரிமைகள் ஆகியவற்றை வைத்து மக்கள் முடிவுசெய்கிறார்கள். எந்தக் கட்சி நமக்காக நிற்கிறது என்பதை, மக்கள்தான் முடிவெடுக்கிறார்கள்.”

திருமாவளவன்

``ஈழ விவகாரத்தில் நேர்மையான இயக்கம் வி.சி.க என தற்போது பதிவுசெய்யவேண்டிய அவசியமென்ன?”

``உலகத்தமிழர்களே வி.சி.க-தி.மு.க கூட்டணியோடு நிற்பதை விமர்சிக்கிறார்கள். ஏராளமான போராட்டங்கள், மாநாடுகள், பேரணிகளை நடத்தியிருக்கிறோம். 2009-ல் தி.மு.க-வுடன் கூட்டணியில் தொடர்ந்தோம் என்பதற்காக, ஒட்டுமொத்தமாக ஈழத்தமிழர்கள் பிரச்னையில் திருமாவளவனும், வி.சி.க-வும் எதிராகப் போய்விட்டார்கள் என்ற கருத்தை, உலகத்தமிழர்கள் மத்தியில் முன்வைக்கிறார்கள். ஆகவே, அது குறித்து விளக்கமளித்தேன்.”

“பா.ஜ.க-வுடனான அ.தி.மு.க-வின் கூட்டணி முறிவு குறித்து உங்கள் பார்வையென்ன?"

``அ.தி.மு.க, தி.மு.க-வை எதிர்க்கக்கூடிய இடத்தைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம். அந்த இடத்தை பா.ஜ.க-விடம் இழந்துவிடக் கூடாதென்றுதான் வி.சி.க தொடர்ந்து வலியுறுத்துகிறது. கூட்டணியை அ.தி.மு.க முறித்துக் கொண்டதை வரவேற்கிறேன்."

எடப்பாடியுடன் திருமாவளவன்

``அ.தி.மு.க-வின் கூட்டணி முறிவு, தி.மு.க கூட்டணியை பலவீனமடையச் செய்யுமா?”

``தி.மு.க கூட்டணியை பலவீனப்படுத்தும் எனச் சொல்ல முடியாது. தி.மு.க கூட்டணி நாற்பது தொகுதிகளிலும் வெல்லும்.”


மேலும் படிக்க ``சாதிய வன்கொடுமைகள் ஆட்சியைப் பொறுத்து நடப்பதல்ல..!” - சொல்கிறார் திருமாவளவன்
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top