சுப்ரதா ராய் மரணம் - கற்றுத் தரும் பாடம்!

0

மனிதர்கள் வாழ்ந்து முடித்த வாழ்க்கையில் இருந்து நாம் பல பாடங்களைக் கற்றுக்கொள்ள முடியும். பெரிய தவறு எதுவும் செய்யாமல், ஊருக்கு நல்லதையே செய்து வாழ்ந்து முடிப்பவர்கள், பலரும் பின்பற்ற நினைக்கும் உதாரண புருஷர்களாக ஆகிறார்கள். சுயநலத்துக்காகப் பெரிய தவறுகளைச் செய்து வாழ்ந்து முடிப்பவர்கள் யாரும் பின்பற்றக்கூடாத உதாரணங்களாக மாறுகிறார்கள். இதில், இரண்டாவது வகை மனிதர்... சகாரா இந்தியா பரிவார் நிறுவனத்தின் நிறுவனர் சுப்ரதா ராய்.

பீகாரில் பிறந்த சுப்ரதா, வாழ்க்கையில் முன்னேறிவிட வேண்டும் என்பதில் அளவுக்கு அதிகமான ஆர்வம் கொண்டிருந்தார். வெறும் 2,000 ரூபாய் முதலீட்டில் தொடங்கியது அவர் வாழ்க்கை. உ.பி அரசின் பாசனத் துறைக்குக் கற்களை விநியோகம் செய்தது, வெள்ளியின் சுத்தத்தை அளந்து சொல்லும் கருவியை உருவாக்கியது, பழைய ஃபேன்களை வாங்கி விற்றது என்று அவர் செய்யாத தொழிலே இல்லை. அத்தனையிலும் அவர் அடைந்தது தோல்விதான். ஆனால், அவர் துவண்டு போய்விடவில்லை. ‘அடுத்து, அடுத்து...’ என்று விக்கிரமாதித்தன்போல விடாமுயற்சியுடன் அவர் செயல்பட்டுக்கொண்டே இருந்தார்.

இந்த முயற்சிதான் பிற்பாடு சகாரா இந்தியா பரிவார் என்கிற மாபெரும் குழுமத்தை உருவாக்க அடிப்படையாக இருந்தது. ரியல் எஸ்டேட், நிதித்துறை, தொலைக்காட்சி, சினிமா தயாரிப்பு, விமான நிறுவனம், ஹோட்டல், கிரிக்கெட் என அவர் செய்யாத தொழிலே இல்லை. அத்தனையிலும் அவர் அடைந்தது மிகப் பெரிய வெற்றி. அது, அவரை ஒரு ‘ரோல்மாடல்’ ஆக மாற்றியது.

அதே நேரத்தில், பொய், ஏமாற்று, மோசடி, துரோகம் என அவர் முகத்தில் அப்பியிருந்த அழுக்குகளை வெளியே தெரிந்துவிடாதபடி சாதுரியமாக நடந்து கொண்டார். ஒன்றும் அறியாத அப்பாவி மக்களையே ஏமாற்றத் தயாரானார். மிக அதிகமான லாபம் கிடைக்கும் என்று சொல்லி அவர் நடத்திய சாரதா சிட் ஃபண்ட் திட்டம் மூலம் சுமார் இரண்டு கோடி ஏழைகளிடமிருந்து பல ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை வசூல் செய்து, புனேவுக்குப் பக்கத்தில் உள்ள ஆம்பியில் சொகுசு வீடுகளைக் கட்டி விற்று, பெரும் பணம் சம்பாதிக்க நினைத்தார்! ஆனால், அவரது அசட்டுத் தைரியம் அவரை சிக்கலில் சிக்க வைத்தது.

தான் செய்த தவறு வெட்டவெளிச்சமானபோது, அவர் ஒப்புக்கொள்ளவில்லை. சாதாரண மக்களிடமிருந்து வாங்கிய பணத்தைத் திரும்பத் தரும் நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, செபியையும் நீதிமன்றத்தையும் அவமதிக்கும் வகையிலேயே நடந்துகொண்டார். விளைவு, அவர் சம்பாதித்த பல ஆயிரம் கோடி ரூபாய் அவருக்கு எந்த வகையிலும் பயன்படாமலே போனது. எந்த நேரத்திலும் சிறைக்குச் செல்லலாம் எனும் சூழலில், அதே கவலையுடன் கடந்த 14-ம் தேதியன்று தன் 75-வது வயதில், மும்பையில் உயிரிழந்திருக்கிறார் சுப்ரதா.

நன்னெறி மறந்து, நேர்மை தவறி, தன் சுயநலத்துக்கு ஏழைகளின் வயிற்றிலும் அடிக்கத் துணிந்து, அரசின் விதிமுறைகளை எல்லாம் காற்றில் பறக்கவிட்டு, பிசினஸில் அடையும் வெற்றி நிலைத்து நிற்கவே நிற்காது என்கிற பாடத்தை சுப்ரதா ராயின் மரணத்தில் இருந்து அனைவரும் அவசியம் கற்க வேண்டும்!

- ஆசிரியர்


மேலும் படிக்க சுப்ரதா ராய் மரணம் - கற்றுத் தரும் பாடம்!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top