கேரளா: மகனைக் கைதுசெய்யச் சென்ற போலீஸை நோக்கி துப்பாக்கியால் சுட்ட தந்தை கைது... என்ன நடந்தது?

0

கேரள மாநிலம், கண்ணூர் சிறைய்க்கல் பகுதியைச் சேர்ந்தவர் பாபு உம்மன் தாமஸ். இவரின் மகன் ரோஷன். ரோஷன் மீது வளப்பட்டணம் காவல் நிலையத்தில் கடந்த மாதம் 23-ம் தேதி ஒரு கொலை முயற்சி வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கில் தலைமறைவாக இருந்த ரோஷனைத் தேடி அவரது வீட்டுக்கு நேற்று இரவு போலீஸார் சென்றுள்ளனர். அப்போது வீட்டின் மாடியில் நின்றுகொண்டிருந்த பாபு உம்மன் தாமஸ், துப்பாக்கியால் போலீஸை நோக்கி சுட்டதாக கூறப்படுகிறது. ஆனால், அதிர்ஷ்டவசமாக போலீஸார் மீது தோட்டாக்கள் படவில்லை எனக் கூறப்படுகிறது. பின்னர் போலீஸார் வேகமாக செயல்பட்டு பாபு  உம்மன் தாமஸை மடக்கி பிடித்து கைதுசெய்திருக்கிறார்கள். பாபு உம்மன் தாமஸ் ரிவால்வர் மூலம் மூன்று ரவுண்டுகள் சுட்டதாகவும், உடனடியாக குனிந்ததால் தோட்டாக்கள் தங்கள் மீது படவில்லை எனவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

வளப்பட்டணம் காவல் நிலையம்

அதே சமயம் பாபு உம்மன் தாமஸின் மனைவி லிண்டா, "போலீஸார் தங்களுடன் சில ரௌடிகளை அழைத்துக்கொண்டு வந்திருந்தனர். அவர்கள் எங்கள் வீட்டையும், இரண்டு கார்களையும் அடித்து நொறுக்கினர். அதனால் தற்காத்துக்கொள்வதற்காகவே என்னுடைய கணவர் வானத்தை நோக்கி சுட்டார். அவர் போலீஸை நோக்கி துப்பாக்கியால் சுடவில்லை" என தெரிவித்துள்ளார்.

சம்பவம் நடந்த வீடு

இதற்கிடையே பாபு உம்மன் வைத்திருந்தது, லைசென்ஸ் பெற்ற துப்பாக்கி என தெரியவந்துள்ளது. இதையடுத்து கண்ணூர் சிட்டி போலீஸ் கமிஷனர் அஜித்குமார் சம்பவம் நடந்த வீட்டை நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் கமிஷனர் கூறுகையில், "ரோஷன் வீட்டில் இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்தே அவர்கள் அங்கு சென்றனர். போலீஸாருடன் ரௌடிகள் யாரும் செல்லவில்லை" என்றார்.


மேலும் படிக்க கேரளா: மகனைக் கைதுசெய்யச் சென்ற போலீஸை நோக்கி துப்பாக்கியால் சுட்ட தந்தை கைது... என்ன நடந்தது?
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top