தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரம்: நடவடிக்கை எடுப்பதில் மெத்தனம் காட்டுகிறதா திமுக அரசு?

0

`தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தி ஆய்வறிக்கை சமர்ப்பித்த நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் பரிந்துரைப்படி ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?' என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது. இது தொடர்பாக விளக்கமளிக்கவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு - அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம்

ஒட்டுமொத்த தமிழ்நாட்டையே உலுக்கிப்போட்ட சம்பவம், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு. 2018-ம் ஆண்டு தூத்துக்குடி வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையால் தாங்கள் கேன்சர் உள்ளிட்ட நோய் பாதிப்புக்கு ஆளாகிவருவதாகவும், நீர், நிலம், காற்று என தூத்துக்குடியின் சுற்றுச்சூழலே மாசுபட்டு வாழத்தகுதியற்ற இடமாக மாறிவருவதாகவும் கூறி, சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் ஆலைக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் 100-வது நாளில், மிகப்பெரிய பேரணியை நடத்திய பொதுமக்கள்மீது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். ஸ்னைப்பர் துப்பாக்கிகள் மூலம் குறிவைத்து நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச்சூட்டில், 13 பேர் குண்டடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக, தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. பின்னர் மனித உரிமை ஆணையம், புலனாய்வுப் பிரிவு அறிக்கையின் அடிப்படையிலும், தமிழ்நாடு அரசின் அறிக்கையின் அடிப்படையிலும் வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டது. ஆனால், `இந்த வழக்கு விசாரணை முறையாக நடத்தப்படவில்லை, எனது புகாரின் அடிப்படையில், இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்' எனக் கூறி மதுரையை சேர்ந்த வழக்கறிஞரும், மனித உரிமை செயற்பாட்டாளருமான ஹென்றி திபேன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

ஹென்றி திபேன்

இந்த வழக்கு நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, என்.மாலா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணையில் இருக்கிறது. கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தேசிய மனித உரிமை ஆணையத்தின் அறிக்கை தமிழக அரசுக்கு வழங்கப்பட்டுள்ளதா என கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்றம், அது குறித்து பதிலளிக்கவும் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசுத் தரப்பில், `உயர் நீதிமன்றத்திலிருந்து பெற்ற அறிக்கையைத் தவிர, தேசிய மனித உரிமை ஆணையத்திடம் இருந்து எந்த அறிக்கையும் கிடைக்கப்பெறவில்லை!' என பதிலளிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து மனுதாரர் ஹென்றி திபேன், ``மனித உரிமை ஆணைய சட்டப்படி, அறிக்கையை சம்பந்தப்பட்ட அரசுக்கும், புகார்தாரர்களுக்கும் வழங்க வேண்டும். மேலும், துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவுசெய்த சி.பி.ஐ, தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் திருமலை என்ற காவல்துறை அதிகாரியை மட்டும் வழக்கில் சேர்த்திருக்கிறது. ஆனால், துப்பாக்கிச்சூடு தொடர்பாக விசாரணை நடத்திய நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம், 17 அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்தது. அந்த அறிக்கையை ஏற்று அரசாணை பிறப்பித்த தமிழ்நாடு அரசு, அதனடிப்படையில் எந்த மேல் நடவடிக்கையும் எடுக்கவில்லை!" எனக் குற்றம்சாட்டினார்.

சென்னை உயர் நீதிமன்றம்

இதையடுத்து, `தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்காதது ஏன்?' என தமிழ்நாடு அரசுக்கு கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்றம், இந்த விவகாரம் தொடர்பாக விளக்கமளிக்கவும் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டிருக்கிறது. இந்த வழக்கு தொடர்பான அடுத்தகட்ட விசாரணை வரும் நவம்பர் 17-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.

சட்டத்துறை அமைச்சர் ரகுபதி

இந்த நிலையில், தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, ``தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்த அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதற்கான பணிகளை சட்டத்துறை செய்து வருகிறது!" எனத் தெரிவித்திருக்கிறார்.

``கடந்த அ.தி.மு.க ஆட்சியில் நடந்த சம்பவத்தில், தி.மு.க அரசே அமைத்த அருணா ஜெகதீசன் ஆணையத்தின் பரிந்துரைப்படி, தவறுசெய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தி.மு.க அரசுக்கு என்ன தயக்கம்?" என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பிவருகின்றனர்.


மேலும் படிக்க தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரம்: நடவடிக்கை எடுப்பதில் மெத்தனம் காட்டுகிறதா திமுக அரசு?
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top