முதல்வர் நிவாரண நிதியை கையாண்ட வழக்கு... பினராயி விஜயனை விமர்சித்த லோக் ஆயுக்தா பெஞ்ச்!

0

கேரள மாநிலத்தில் சி.பி.எம் கட்சியின் பினராயி விஜயன் இரண்டாவது முறையாக முதல்வராக ஆட்சி செய்துவருகிறார். முந்தைய பினராயி விஜயன் ஆட்சியில் என்.சி.பி கட்சியின் தலைவராக இருந்த மறைந்த உழவூர் விஜயனின் குடும்பத்துக்கு 25 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டது. செங்கன்னூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ ராமச்சந்திரன் நாயர் குடும்பத்துக்கு 8.6 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டது. மேலும், அவரின் மகனுக்கு படிப்புக்கு ஏற்ற வேலை வழங்கவும் அரசு தீர்மானித்தது. மேலும், சி.பி.எம் மாநில செயலாளராக இருந்த மறைந்த கொடியேரி பாலகிருஷ்ணனின் பைலட் வாகனம் மோதிய விபத்தில் இறந்த சிவில் போலீஸ் ஆபீசரின் குடும்பத்துக்கு 20 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.

லோக் ஆயுக்தா

முதல்வரின் நிவாரண நிதியில் இருந்து இந்த மூன்று நிதிகளும் வழங்கப்பட்டன. இந்த மூன்று நிகழ்வுகளிலும் முதல்வரின் நிவாரண நிதியில் இருந்து பணம் வழங்கியது ஊழல் எனவும், வேண்டப்பட்டவர்களுக்காக அரசு நிதி செலவு செய்யப்பட்டதாகவும் ஆர்.எஸ்.சசிகுமார் என்பவர் 2018-ல் லோக் ஆயுக்தாவில் மனு அளித்தார். இந்த வழக்கில் முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட 18 அமைச்சர்கள், தலைமை செயலாளர் ஆகியோர் மீது குற்றம்சாடப்பட்டிருந்தது. இந்த மனுவை லோக் ஆயுக்தாவின் மூன்று நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. அந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கியது.  அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவில் தலையிட முடியாது எனவும், பொது பணத்தை கையாள அமைச்சரவைக்கு அனுமதி உண்டு எனவும் லோக் ஆயுக்தா தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

அதே சமயம், அமைச்சரவை முடிவில் நடைமுறை குளறுபடி ஏற்பட்டுள்ளதாகவும், மூன்று நபர்களிடம் இருந்து உரிய விண்ணப்ப மனு பெறப்படவில்லை எனவும் லோக் ஆயுக்தா கருத்து தெரிவித்துள்ளது. அமைச்சரவையின் குறிப்பு இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்பட்டது விதிமுறைக்கு முரணானது எனவும், நடைமுறைகளில் குறைபாடு உள்ளதாகவும் லோக் ஆயுக்தா கருத்து தெரிவித்துள்ளது. இதில் ஊழலோ, அல்லது வேண்டப்பட்டவர்களுக்காக செய்யப்பட்டதாகவும் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை. எனவே இந்த மனுமீது தொடர் விசாரணை தேவை இல்லை என லோக் ஆயுக்தா தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

கேரள முதல்வர் பினராயி விஜயன்

இந்த வழக்கில் எதிராக தீர்ப்பு வந்திருந்தால் முதல்வர் உள்ளிட்டவர்கள் ராஜினாமா செய்யும் நிலை ஏற்பட்டிருக்கும் என கூறப்படுகிறது. அதே சமயம் பாதகம் இல்லாத தீர்ப்பு வெளியானதால் முதல்வர் பினராயி விஜயன் மற்றும் அமைச்சர்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது. தீர்ப்பு குறித்து மனுதாரரான ஆர்.எஸ்.சசிகுமார் கூறுகையில், "முதல்வருடன் இப்தார் விருந்தில் கலந்துகொண்ட நீதிபதிகளிடம் இருந்து வேறு தீர்ப்பை நான் எதிர்பார்க்கவில்லை. உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய உள்ளேன்" என தெரிவித்துள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk


மேலும் படிக்க முதல்வர் நிவாரண நிதியை கையாண்ட வழக்கு... பினராயி விஜயனை விமர்சித்த லோக் ஆயுக்தா பெஞ்ச்!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top